Kathir News
Begin typing your search above and press return to search.

மதக்கலவரத்தை தூண்டும் வகையில் 'கார்ட்டூன்' பரப்பும் கம்யூனிஸ்ட் உறுப்பினர்!

மதக்கலவரத்தை தூண்டும் வகையில் கார்ட்டூன் பரப்பும் கம்யூனிஸ்ட் உறுப்பினர்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 Feb 2022 1:37 PM GMT

வேலூர்: 'இந்து ஒருவர் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை, மகாபாரதத்தில் சிலையை உருவுவது' போன்ற கார்ட்டூனை, கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒருவர் வாட்சாப்பில் பரப்பி வருவதாக குற்றச்சாட்டு.


ஹிஜாப் விவகாரம் நாடு முழுவதும் பேசுபொருள் ஆகியுள்ளது. இது குறித்து பலரும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில், இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள் தமிழ்நாட்டில் ஹிஜாப் விவகாரத்தை வைத்து மத கலவரங்களை தூண்டும் வகையில் செயலாற்றி வருகின்றனர்.


இதன் வரிசையில், வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் பகுதியில், வாட்ஸ் அப் குழுக்களில் சாமிநாதன் என்ற கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் கார்ட்டூன் ஒன்றை பரப்பினார்.

அக் கார்ட்டூனில், இந்து போன்ற தோற்றமளிக்கும் ஆண் ஒருவர், ஹிஜாப் அணிந்த பெண்ணின் சேலையை உருவ தைப்போல் வரையப்பட்ட கார்ட்டூனை பரப்பியுள்ளார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறையிடம் இந்து முன்னணி புகார் மனு அளித்துள்ளது.


ஹிஜாப் போன்ற விவகாரத்தை வைத்துக்கொண்டு கம்யூனிஸ்டுகள் அரசியல் லாபம் தேடுகிறார்கள் என்று அனைவரும் விமர்சித்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News