Begin typing your search above and press return to search.
கேரள பாதிரியார்களின் கூட்டு கற்பழிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பாதிரியார்களுக்கு முன் ஜாமீன் ரத்து
கேரள பாதிரியார்களின் கூட்டு கற்பழிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பாதிரியார்களுக்கு முன் ஜாமீன் ரத்து
By : Kathir Webdesk
கேரள பாதிரியார்களின் கூட்டு கற்பழிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் முன் ஜாமினை மறுத்துள்ளது என்று டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டுள்ளது. திருமணமான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு கேரள பாதிரியார்களுக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு, உச்ச நீதிமன்ற நீதிபதியான அர்ஜன் குமார் சிக்ரி உத்தரவிட்டார்.
ஆகஸ்ட் 13 ம் தேதி காவல் நிலையத்தில் சரணடைந்து, போலீஸ் விசாரணையில் ஒத்துழைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பாதிரியார்கள் தங்கள் மொபைல் போன்களை புலனாய்வு அதிகாரியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டனர். பாதிரியார் சோனி வர்கீஸ் மற்றும் பாதிரியார் ஜெயஸ் கே ஜார்ஜ் ஆகிய இருவரும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆவர்.
Next Story