Begin typing your search above and press return to search.
கிணற்றில் கிடந்த கன்னியாஸ்திரியின் உடல் - தொடரும் கேரள கிறிஸ்துவ தேவாலயங்களின் மர்மம்
கிணற்றில் கிடந்த கன்னியாஸ்திரியின் உடல் - தொடரும் கேரள கிறிஸ்துவ தேவாலயங்களின் மர்மம்
By : Kathir Webdesk
கேரளாவில் ஒரு கன்னியாஸ்திரியின் உடல், கிணற்றில் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 54 வயதான சுசானின் உடல், மாநில தலை நகரத்திலிருந்து சுமார் 80 கி.மீ., தொலைவில் உள்ள பத்தநபுரம் செயின்ட் ஸ்டீபன்ஸ் பள்ளியின் ஆசிரியர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இன்று காலை சுமார் 9 மணியளவில் மவுண்ட் டாபார் கான்வென்ட்டில் பணி புரிபவர்கள், முதன் முதலில் கிணற்றுக்கு அருகே இருந்த இரத்தக் கறையை கண்டுபிடித்தனர்.
கடந்த 12 ஆண்டுகளாக அந்த பள்ளியில் ஆசிரியராக இருந்து வந்தார், கன்னியாஸ்திரி சுசன்.
கடந்த ஜூன் மாதம், கேரளாவில் ஐந்து பாதிரியார்கள் சேர்ந்து பாவ மன்னிப்பு கேட்க வந்த பெண்ணை மிரட்டி ஒருவரை அடுத்து ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த மலங்கரா ஆர்த்தொடொக்ஸ் தேவாலயத்தின் கீழ் தான் இந்த பள்ளி இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story