Begin typing your search above and press return to search.
வங்கிகளில் பல ஆயிரம் கோடி மோசடி செய்த விஜய் மல்லையாவுக்கு ஆதரவாக களத்தில் குதித்த காங்கிரஸ் எம்.பி ப.சிதம்பரம்! வெளிவருகிறதா 'சிதம்பர ரகசியங்கள்'?
வங்கிகளில் பல ஆயிரம் கோடி மோசடி செய்த விஜய் மல்லையாவுக்கு ஆதரவாக களத்தில் குதித்த காங்கிரஸ் எம்.பி ப.சிதம்பரம்! வெளிவருகிறதா 'சிதம்பர ரகசியங்கள்'?
By : Kathir Webdesk
வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த விஜய் மல்லையாவுக்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடியது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நேற்று முன்தினம் நீதிபதி பி.வீரப்பா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விஜய் மல்லயாவுக்கு ஆதரவாகவும், பொதுத்துறை வங்கியான ஐ.டி.பி.ஐ எதிராகவும் வாதாடினார். அந்த விவகாரம் தொடர்பாக மேலும் சாட்சி ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய கால அவகாசம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி பி.வீரப்பா வழக்கை டிசம்பர் 17-க்கு ஒத்திவைத்தார். தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு ஆதரவாக ப.சிதம்பரம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடியது காங்கிரஸ் கட்சியினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், விஜய் மல்லையா வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டில் தலைமறைவானதற்கு பா.ஜ.க தான் காரணம் என காங்கிரஸ் கட்சியினர் போலியாக குற்றம் சாட்டி வரும் நிலையில் தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு ஆதரவாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ப.சிதரம்பரம் வாதாடியது காங்கிரஸ் கட்சியின் பங்கை வெளிச்சம் போட்டு காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
அப்போது முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விஜய் மல்லயாவுக்கு ஆதரவாகவும், பொதுத்துறை வங்கியான ஐ.டி.பி.ஐ எதிராகவும் வாதாடினார். அந்த விவகாரம் தொடர்பாக மேலும் சாட்சி ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய கால அவகாசம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி பி.வீரப்பா வழக்கை டிசம்பர் 17-க்கு ஒத்திவைத்தார். தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு ஆதரவாக ப.சிதம்பரம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடியது காங்கிரஸ் கட்சியினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், விஜய் மல்லையா வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டில் தலைமறைவானதற்கு பா.ஜ.க தான் காரணம் என காங்கிரஸ் கட்சியினர் போலியாக குற்றம் சாட்டி வரும் நிலையில் தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு ஆதரவாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ப.சிதரம்பரம் வாதாடியது காங்கிரஸ் கட்சியின் பங்கை வெளிச்சம் போட்டு காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
Next Story