Begin typing your search above and press return to search.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ₹1200 கோடி வழங்கும் மோடி சர்க்கார்..!
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ₹1200 கோடி வழங்கும் மோடி சர்க்கார்..!
By : Kathir Webdesk
2015-ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து, மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் தலைமையில் தமிழகம் வந்த உயர்மட்டக் குழுவினர், குறிப்பிட்ட 5 இடங்களுக்கும் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர். எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மதுரை, தஞ்சாவூர், ஈரோடு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள இடங்களை தேர்வு செய்து மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது. இந்த இடங்களிலேயே மத்திய சுகாதாரத்துறை குழுவினர் ஆய்வு செய்தனர்.
பின்னர் அந்த இடங்கள் தொடர்பான சிறப்பு அம்சங்கள் குறித்து அறிக்கை அளிக்க அறிவுறுத்தினர். அதன்பிறகு எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக கோர்ட்டில் பொது நல வழக்கும் தொடரப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 18-ந் தேதி டெல்லியில் மத்திய குழு கூடி மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் வழங்கியது. அதனைத் தொடர்ந்து, தமிழக அரசு விரிவான திட்ட அறிக்கை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இந்த நிலையில், கடந்த வாரம் மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள செலவின நிதி குழு, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு நிதி வழங்க ஒப்புதல் வழங்கியது. அதன் அடிப்படையில், அடுத்த சில நாட்களில் மத்திய அமைச்சரவை கூடி ₹1,200 கோடி நிதியளிக்க ஒப்புதல் அளிக்க இருக்கிறது.
பின்னர் அந்த இடங்கள் தொடர்பான சிறப்பு அம்சங்கள் குறித்து அறிக்கை அளிக்க அறிவுறுத்தினர். அதன்பிறகு எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக கோர்ட்டில் பொது நல வழக்கும் தொடரப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 18-ந் தேதி டெல்லியில் மத்திய குழு கூடி மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் வழங்கியது. அதனைத் தொடர்ந்து, தமிழக அரசு விரிவான திட்ட அறிக்கை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இந்த நிலையில், கடந்த வாரம் மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள செலவின நிதி குழு, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு நிதி வழங்க ஒப்புதல் வழங்கியது. அதன் அடிப்படையில், அடுத்த சில நாட்களில் மத்திய அமைச்சரவை கூடி ₹1,200 கோடி நிதியளிக்க ஒப்புதல் அளிக்க இருக்கிறது.
Next Story