Kathir News
Begin typing your search above and press return to search.

13 வயது சிறுமியை கொடூரமாக கற்பழித்த அர்பான், இர்பான் கான் உள்ளிட்ட 5 பேர் சேர்ந்த கும்பல் : ஆம்பூரில் கொடூரம்

13 வயது சிறுமியை கொடூரமாக கற்பழித்த அர்பான், இர்பான் கான் உள்ளிட்ட 5 பேர் சேர்ந்த கும்பல் : ஆம்பூரில் கொடூரம்

13 வயது சிறுமியை கொடூரமாக கற்பழித்த அர்பான், இர்பான் கான் உள்ளிட்ட 5 பேர் சேர்ந்த கும்பல் : ஆம்பூரில் கொடூரம்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Dec 2018 8:26 AM GMT

ஆம்பூர் பகுதியை சேர்ந்த 6-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியை, ஆம்பூர் மோட்டுக்கொல்லையை சேர்ந்த அர்பான்(வயது 24), நியூபெத்லகேமை சேர்ந்த இர்பான்கான்(22), மு.க.கொல்லையை சேர்ந்த முதஸீர் உள்பட 5 பேர் கொண்ட கும்பல் ஒரு காரில் கடத்தியதாகவும் காரில் பெங்களூருவுக்கு சென்று அங்கு ஒரு விடுதியில் மாணவியை அடைத்து வைத்து கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் மாலைமலர் செய்தி குறிப்பு கூறுகிறது.
இந்தநிலையில் பள்ளி மாணவியை காணாமல் தவித்த பெற்றோர் இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசிலும், அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் மாணவியை கடத்தி சென்ற கும்பலை தேடி வந்தனர். போலீஸ் தேடுவதை அறிந்த அந்த கும்பல் மாணவியை பெங்களூரில் விட்டுவிட்டு காரில் தப்பி சென்றுவிட்டனர் என்று அந்த செய்தி குறிப்பு மேலும் கூறுகிறது.
இதையடுத்து டி.எஸ்.பி சச்சிதானந்தம் தலைமையிலான தனிப்படை போலீசார் பெங்களூர் விரைந்தனர். இபான் அகமது பயன்படுத்தி வந்த செல்போன் மூலம் அவன் இருக்கும் இடத்தை கண்டு பிடிக்க 2 நாட்கள் தேடுதல் வேட்டை நடத்தினர். பின்னர் அங்குள்ள விடுதி ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மாணவியை காவல்துறையினர் மீட்டனர் என்று பாலிமர் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
கடத்தல் தொடர்பாக ஆட்டோ ஓட்டுனர் இபான் அகமதுவிடம் நடத்திய விசாரணையில் மாணவிக்கு நேர்ந்த கொடுமை வெளிச்சத்துக்கு வந்தது என்று அந்த செய்தி குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News