Begin typing your search above and press return to search.
ஹரியானாவில் நடந்த மேயர் தேர்தலில் அனைத்து மாநகராட்சிகளிலும் பா.ஜ.க அபார வெற்றி !
ஹரியானாவில் நடந்த மேயர் தேர்தலில் அனைத்து மாநகராட்சிகளிலும் பா.ஜ.க அபார வெற்றி !
By : Kathir Webdesk
நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்திஸ்கர் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியை இழந்தது. வாக்கு சதவீதத்தில் இரண்டு கட்சிகளிடையே மிக குறைவான வித்தியாசமே இருந்தது. இதனால் மோடி அலை ஓய்ந்தது, ராகுல் அலை வீசுகிறது என்று காங்கிரஸ் கூறிவந்தது. இதனால் பா.ஜ தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் சோர்வடைந்தனர்.
இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் 5 மாநகரங்களுக்கு மேயர் பதவிகளுக்கான தேர்தல் கடந்த ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. இத் தேர்தலில் 63 சதவீத வாக்குகள் பதிவாகின. முதல்வர் மனோகர் லால் கட்டார் பா.ஜ., வேட்பாளர்களுக்காக தீவிரமாக இறுதி கட்ட பிரசாரம் செய்தார்.
இதன் பலனாக யமுனா நகரில் போட்டியிட்ட பா.ஜ.,வேட்பாளர் மதன்சிங் பிற வேட்பாளர்களை விட 40 ஆயிரம் ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ரானிபட் நகரில் பா.ஜ., வேட்பாளர் அவ்நீத் 74,900 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். கர்னால், ஹிசார்,ரோஹ்தக் நகரில் போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர்களும் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றி பெற்றனர்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் நேரடியாக கட்சியின் சின்னத்தை பயன்படுத்த வில்லை. அதே நேரத்தில் சுயேட்சை வேட்பாளர்களுக்கு மறைமுக ஆதரவை தந்தது. காங்கிரசின் இந்த நடவடிக்கையை முறியடித்து பா.ஜ.,வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.பாஜ.,வின் இந்த வெற்றி மாநில பா.ஜ.,தலைவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Inputs : Dinamalar
இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் 5 மாநகரங்களுக்கு மேயர் பதவிகளுக்கான தேர்தல் கடந்த ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. இத் தேர்தலில் 63 சதவீத வாக்குகள் பதிவாகின. முதல்வர் மனோகர் லால் கட்டார் பா.ஜ., வேட்பாளர்களுக்காக தீவிரமாக இறுதி கட்ட பிரசாரம் செய்தார்.
இதன் பலனாக யமுனா நகரில் போட்டியிட்ட பா.ஜ.,வேட்பாளர் மதன்சிங் பிற வேட்பாளர்களை விட 40 ஆயிரம் ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ரானிபட் நகரில் பா.ஜ., வேட்பாளர் அவ்நீத் 74,900 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். கர்னால், ஹிசார்,ரோஹ்தக் நகரில் போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர்களும் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றி பெற்றனர்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் நேரடியாக கட்சியின் சின்னத்தை பயன்படுத்த வில்லை. அதே நேரத்தில் சுயேட்சை வேட்பாளர்களுக்கு மறைமுக ஆதரவை தந்தது. காங்கிரசின் இந்த நடவடிக்கையை முறியடித்து பா.ஜ.,வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.பாஜ.,வின் இந்த வெற்றி மாநில பா.ஜ.,தலைவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Inputs : Dinamalar
Next Story