Kathir News
Begin typing your search above and press return to search.

பூடானில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் - இந்தியா சார்பில் ₹4500 கோடி நிதியுதவி!

பூடானில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் - இந்தியா சார்பில் ₹4500 கோடி நிதியுதவி!

பூடானில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் - இந்தியா சார்பில் ₹4500 கோடி நிதியுதவி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Dec 2018 3:38 AM GMT

பூடானின் புதிய பிரதமர் லோதே ஷெரிங், தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்தியா மற்றும் பூடான் இடையேயான உறவின் பொன்விழா ஆண்டை சிறப்பிக்கும் வகையில் இந்தியாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். டிசம்பர் 27-ல் டெல்லி வந்து சேர்ந்த அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


வரவேற்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து இரு நாட்டு பிரதமர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவுகள் மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேசப்பட்டது. பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பூடானின் 12-வது ஐந்தாண்டு திட்டத்திற்கு, இந்தியா சார்பில், ₹4500 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். அதன் பின்னர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை, பூடான் பிரதமர் சந்தித்தார்.


அப்போது, அவருக்கு சுஷ்மா வாழ்த்து தெரிவித்தார். பின்னர் இருதரப்பு உறவுகளின் முக்கிய அம்சங்கள் தொடர்பாக இருவரும் தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். இரு தலைவர்களின் சந்திப்புக்கு பின்னர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "பூடானில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைக்க 5 ஆண்டு திட்டத்தின் கீழ் ₹4500 கோடி நிதி உதவியை இந்தியா வழங்கும் என்றும் விண்வெளித்துறையில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்த இந்தியா உறுதுணையாக இருக்கும்" என அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News