Kathir News
Begin typing your search above and press return to search.

"தி.மு.க அலுவலகத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துக்கொள்வேன்" - தி.மு.க வேலூர் கிழக்கு மாவட்டத்தில் உச்சக்கட்ட உட்கட்சி பூசல்

"தி.மு.க அலுவலகத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துக்கொள்வேன்" - தி.மு.க வேலூர் கிழக்கு மாவட்டத்தில் உச்சக்கட்ட உட்கட்சி பூசல்

தி.மு.க அலுவலகத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துக்கொள்வேன் - தி.மு.க வேலூர் கிழக்கு மாவட்டத்தில் உச்சக்கட்ட உட்கட்சி பூசல்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Jan 2019 4:36 AM GMT

ராணிப்பேட்டையில் உள்ள வேலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் கடந்த 30-ம் தேதி, "மக்களிடம் செல்வோம்... மக்களிடம் சொல்வோம்... மக்கள் மனதை வெல்வோம்" என்ற பெயரில் ஊராட்சி சபைக் கூட்டம் நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளரும் ராணிப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ-வுமான காந்தி, கூட்டம் தொடங்குவதற்கு முன் ராணிப்பேட்டை நகரச் செயலாளர் பிஞ்சி பிரகாஷை தனியாக அழைத்துப் பேசினார். அப்போது, அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டது. இருவரும் மிகவும் மோசமான கெட்டவார்த்தைகளால் மாறிமாறி திட்டிக்கொண்டனர். ஆத்திரமடைந்த பிஞ்சி பிரகாஷ், தாம் கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து, எம்.எல்.ஏ காந்தியின் முகத்தில் விட்டெறிந்தார். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத எம்.எல்.ஏ, 'சடார்' என்றெழுந்து அடிக்கப் பாய்ந்தார்.
"மேல கை வெச்சிப்பார்... நீ செஞ்ச தில்லுமுல்லு வேலைகளைக் கைப்பட எழுதி வெச்சிட்டு, இங்கேயே தூக்குமாட்டி தற்கொலை செஞ்சிப்பேன். தில் இருந்தா அடிச்சிப்பார்..." என்று சவால்விட்டு, எம்.எல்.ஏ-வை நடுநடுங்க வைத்தார், பிஞ்சி பிரகாஷ். இருதரப்பு ஆதரவாளர்களும் திபுதிபுவென ஓடிவந்து, எம்.எல்.ஏ-வையும், நகரச் செயலாளரையும் இரு பக்கமும் நிறுத்த, பின் 'கேங்வார்' போல் மோதிக்கொள்ளத் தயாராகினர். எம்.எல்.ஏ குறுக்கிட்டு, "தி.மு.க.-விலிருந்து உன்னை நீக்கிவிட்டேன். கட்சி அலுவலகத்தைவிட்டு வெளியே போ..." என்று பிஞ்சி பிரகாஷை எச்சரித்தார். 'இதென்ன உன் கட்சியா... நான் நகரச் செயலாளர். என்னை நீக்கும் அதிகாரம் உனக்கில்லை. கட்சித் தலைமையிடம் உன்மீது புகார் அளிப்பேன்' என்று பதிலடி கொடுத்த பிஞ்சி பிரகாஷ், அவிழ்தெறிந்த வேட்டியை மீண்டும் எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு கட்சி அலுவலகத்தை விட்டு வெளியே சென்றார்.





ஒரே கட்சியில் கோஷ்டி மோதல் இருந்தால் கட்சிக்குத்தானே ஆபத்து.
Content Sourced from The Vikatan Article
Next Story
கதிர் தொகுப்பு
Trending News