Kathir News
Begin typing your search above and press return to search.

சிறுமிகளை நாசம் செய்த கிருஸ்தவ மதபோதகர் - தயவுதாட்சண்யமின்றி நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

சிறுமிகளை நாசம் செய்த கிருஸ்தவ மதபோதகர் - தயவுதாட்சண்யமின்றி நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

சிறுமிகளை நாசம் செய்த கிருஸ்தவ மதபோதகர் - தயவுதாட்சண்யமின்றி நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 Jan 2019 11:10 AM GMT

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2014-ஆம் ஆண்டு 7-ஆம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவியும், 8-ஆம் வகுப்பு படித்து வந்த 14 வயது மாணவி ஒருவரும் இணைபிரியாத தோழிகளாக இருந்தனர். இவர்களில் 13 வயது மாணவி தனது பெற்றோரை இழந்தவர் என்பதால், தனது பாட்டியின் பராமரிப்பில் தங்கி படித்து வந்தார்.
இவர்கள் பள்ளிக்கூடத்தின் அருகே உள்ள இட்லி கடைக்கு சென்று பலகாரங்களை வாங்கி சாப்பிடுவது வழக்கம். ஒருநாள் 13 வயது மாணவி பலகாரம் வாங்குவதற்காக இட்லி கடைக்கு சென்ற போது இட்லி கடை உரிமையாளரான செந்தில் குமாரின் மனைவி தனலட்சுமி(வயது 40) தனது கள்ளக்காதலனான திருக்கண்டேஸ்வரத்தை சேர்ந்த டவர் என்ற ஆனந்தராஜூடன் (24) உல்லாசமாக இருந்ததை பார்த்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி, தனது லீலை வெளியே தெரியாமல் இருப்பதற்காக அந்த மாணவியை தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று கட்டாயப்படுத்தி, ஆனந்தராஜூடன் உல்லாசமாக இருக்க வைத்தாள். அதன்பிறகு ஆனந்தராஜ் பலமுறை மிரட்டி அந்த மாணவியுடன் உல்லாசம் அனுபவித்ததோடு, தனது நண்பர்களான திட்டக்குடியைச் சேர்ந்த மோகன் என்ற மோகன்ராஜ் (28), மதிவாணன் (23) ஆகியோருக்கும் மாணவியை விருந்தாக்கினான்.
இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவி தனலட்சுமியிடம் கூறி கதறி அழுதார். பின்னர் தனலட்சுமி மிரட்டியதால் தனது 14 வயது தோழியையும் தனலட்சுமியின் வீட்டுக்கு அழைத்துச்சென்றார். அந்த மாணவியும் ஆனந்தராஜின் காமப்பசிக்கு இரையானாள். பின்னர் தனலட்சுமி மாணவிகள் இருவரையும் விருத்தாசலத்தில் உள்ள விபசார புரோக்கர் கலாவின் வீட்டுக்கு அழைத்துச்சென்று கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தினாள். அதன்பிறகு கலா இருவரையும் திட்டக்குடியைச் சேர்ந்த மதபோதகர் அருள்தாஸ் என்பவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தாள். அங்கு அவர் 13 வயது மாணவியுடன் உல்லாசம் அனுபவித்துள்ளார். இதேபோல் கலாவும், தனலட்சுமியும், சக புரோக்கர்களும் இரு மாணவிகளையும் விழுப்புரம் மாவட்டம் வளவனூர், சேலம், கடலூர் மாவட்டம் வடலூர் ஆகிய இடங்களுக்கு அழைத்துச்சென்று லாட்ஜிலும், வாடகை வீடுகளிலும் தங்க வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். கடைசியாக வடலூரில் சதீஷ்குமார், அவரது மனைவி தமிழரசி ஆகியோருக்கு மாணவிகள் விற்கப்பட்டனர். அவர்கள் இரு மாணவிகளையும் வடலூரில் உள்ள வாடகை வீட்டில் தங்கவைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். ஒருநாள் இரவில் மாணவிகள் இருவரும் அங்கிருந்து தப்பி திட்டக்குடிக்கு சென்று போலீசில் தங்களுக்கு நேர்ந்த கொடுமை பற்றி தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக 10 பெண்கள் உள்பட 19 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் இடையாக்குறிச்சியை சேர்ந்த சதீஷ்குமார், அவரது மனைவி தமிழரசி. விருத்தாசலம் நாச்சியார்பேட்டையைச் சேர்ந்த கலா. திட்டக்குடி பெரியார் நகரைச் சேர்ந்த செந்தில்குமாரின் மனைவி தனலட்சுமி. மதபோதகர் அருள்தாஸ், ஊ.மங்கலம் காட்டுக்கூனங்குறிச்சி ஸ்ரீதர். வளவனூர் கூட்டுறவு நகரைச் சேர்ந்த சாதிக் பாட்ஷா என்பவரின் மனைவி பாத்திமா. பண்ருட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மனைவி மகா என்ற மகாலட்சுமி. நெல்லிக்குப்பம் சுல்தான்பேட்டை ராதா என்ற கிரிஜா, விருத்தாசலம் ஷர்மிளாபேகம் உள்ளிட்ட 19 பேர் மீது 'போக்சோ' சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் சதீஷ்குமார், அவரது மனைவி தமிழரசி ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். மற்ற 17 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


இந்த வழக்கு விசாரணை நீதிபதி லிங்கேஸ்வரன் முன்னிலையில் கடந்த 4-ந் தேதி நடந்தது. மாணவிகளை பாலியலில் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் மதபோதகர் அருள்தாஸ் உள்பட 16 பேர் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். பண்ருட்டியை சேர்ந்த மகாலட்சுமி மீது போதிய ஆதாரம் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டார். குற்றவாளிகள் அனைவருக்கும் திங்கட்கிழமை தண்டனை வழங்கப்படும் என்றும் நீதிபதி குறிப்பிட்டார். அதன்படி இன்று காலை 11.30 மணிக்கு குற்றவாளிகள் அனைவரும் கடலூர் சிறையில் இருந்து மகளிர் நீதிமன்றத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர். பின்னர் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக நீதிபதி லிங்கேஸ்வரன் விசாரணை நடத்தினார். அதன் பின்னர் குற்றவாளிகளுக்கான தண்டனை விபரத்தை நீதிபதி லிங்கேஸ்வரன் அறிவித்தார். மதபோதகர் அருள்தாசுக்கு 30 ஆண்டு ஜெயில் தண்டனையுடன் ₹5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனந்தராஜ், பாலசுப்பிரமணியனுக்கு 4 ஆயுள் தண்டனையும், கலா, தனலட்சுமி, ஸ்ரீதர், பாத்திமா ஆகியோருக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News