திருபுவனத்தில் H ராஜா - கேட்பாரன்றி அனாதையாகிப்போன தமிழக ஹிந்துக்களுக்கு எந்த நிலையிலும் ஆதரவாக வரும் முதல் குரல் இவருடையதா? #JusticeForRamalingam
திருபுவனத்தில் H ராஜா - கேட்பாரன்றி அனாதையாகிப்போன தமிழக ஹிந்துக்களுக்கு எந்த நிலையிலும் ஆதரவாக வரும் முதல் குரல் இவருடையதா? #JusticeForRamalingam
By : Kathir Webdesk
"மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்திற்காக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (PFI) பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட இராமலிங்கம் அவர்களின் வீட்டிற்கு சென்றிருந்தேன். கணவனை இழந்த 3 மகன்களின் தாய்க்கும் தன் மகனை இழந்த மூதாட்டிக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை." என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் பா.ஜ.க தேசிய செயலாளர் H ராஜா.
ராமலிங்கத்தின் கொடூர மரணத்தை இதுவரை பெரிய கட்சிகள் யாரும் கண்டிக்க கூட இல்லாத நிலையில் கேட்பாரன்றி அனாதையாகிப்போன தமிழக ஹிந்துவுக்கு எந்த நிலையிலும் ஆதரவாக வரும் முதல் குரல் இவருடையது தான் என்ற இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.
நீங்கள் இவரை பிராமணன் என்றோ...எச்சை என்றோ...மதவெறியன் என்றோ எப்படி வேண்டுமானாலும் திட்டிக்கொள்ளுங்கள்.....ஆனால் தமிழக இந்துக்களின் நம்பிக்கை இவரே.....
தனது அரசியல் எதிர்காலம், நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற சிந்தனைகள் .....எதுவுமே இல்லாமல், எதைப்பற்றியும் , எவனைப்பற்றியும் கவலைப்படாமல் தைரியமாக இந்துக்களுக்காக போராடும் ஹெச்.ராஜா ....இன்று திருபுவனத்தில் முஸ்லீம் வெறியர்களால் கொல்லப்பட்ட ராமலிங்த்தின் குடும்பத்தினரை சந்தித்தார்....