Begin typing your search above and press return to search.
வங்கிக் கணக்கு தொடங்க, சிம் வாங்க ஆதாரைப் பயன் படுத்தலாம்.. குடியரசு தலைவர் ஒப்புதல்.!
வங்கிக் கணக்கு தொடங்க, சிம் வாங்க ஆதாரைப் பயன் படுத்தலாம்.. குடியரசு தலைவர் ஒப்புதல்.!
By : Kathir Webdesk
வங்கிக் கணக்கு தொடங்க, சிம் வாங்க ஆதாரைப் பயன் படுத்தலாம் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆதார் தொடர்பான சர்ச்சைகளை அடுத்து, உச்ச நீதிமன்றம் ஆதாரை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த தடை விதித்தது. வங்கிகள், மொபைல் சேவை நிறுவனங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.
எனவே, அரசு ஆதார் சட்டத்தில் சில மாற்றங்களை செய்ய சட்டம் ஒன்றை இயற்றியது. அதில் ஆதாரை அடிப்படை அடையாள அட்டையாகப் பயன் படுத்துவது, ஆதார் விதிமுறைகளை மீறினால் கடுமையான அபராதங்கள் விதிப்பது ஆகிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. தற்போது குடியரசு தலைவரும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
Next Story