Kathir News
Begin typing your search above and press return to search.

சோதனை எதிரொலி.. வேலூர் தொகுதி தேர்தல் ரத்தாகுமா.? சத்யபிரதா சாஹு பரபரப்பு தகவல்.!

சோதனை எதிரொலி.. வேலூர் தொகுதி தேர்தல் ரத்தாகுமா.? சத்யபிரதா சாஹு பரபரப்பு தகவல்.!

சோதனை எதிரொலி.. வேலூர் தொகுதி தேர்தல் ரத்தாகுமா.? சத்யபிரதா சாஹு பரபரப்பு தகவல்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 April 2019 9:55 AM GMT


துரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரியில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது.


இந்நிலையில், இது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு இன்று காலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:


ஆதாரம் மற்றும் கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டே வேலூரில், திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரி மற்றும் அவரது உறவினர்கள் வீடு மற்றும் குடோன்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.


தொடர்ந்து சோதனை நடந்து வருவதால் தற்போதைக்கு எந்த தகவலையும் அளிக்க முடியாது. முழு தகவல் கிடைத்ததும் அது பற்றிய தகவல் தெரிவிக்கப்படும்.


மேலும், நாடாளுமன்ற தேர்தல் ரத்து செய்யப்படுமா? என்ற கேள்விக்கு பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்த வருமான வரித்துறை அறிக்கை தேர்தல் ஆணையருக்கு அனுப்பப்படும். நாடாளுமன்ற தேர்தல் பற்றி தேர்தல் ஆணையமே முடிவெடுக்கும் என்றார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News