Kathir News
Begin typing your search above and press return to search.

"எனது கணவர் இறப்புக்கு தி.மு.க-வே காரணம்!" சாதிக் பாட்சாவின் மனைவி அதிரடி!!

"எனது கணவர் இறப்புக்கு தி.மு.க-வே காரணம்!" சாதிக் பாட்சாவின் மனைவி அதிரடி!!

எனது கணவர் இறப்புக்கு தி.மு.க-வே காரணம்! சாதிக் பாட்சாவின் மனைவி அதிரடி!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 April 2019 8:00 AM GMT


ரெஹானா பானு குடியரசுத் தலைவரிடம் மனு அளித்துள்ளார். சாதிக் பாட்சாவின் மரணம் குறித்து புலனாய்வு விசாரணை நடத்த கோரி உத்தரவிடக வேண்டும் என மனு ஒன்றை அளித்துள்ளார்.


முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் எனக் கூறப்படும், கிரீன் ஹவுஸ் புரோமோட்டர் சாதிக் பாட்ஷாவிடம், 2-ஜி வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், கடந்த 2011ம் ஆண்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். சாதிக் பாட்ஷாவின் மரணம் குறித்து, புலனாய்வுத்துறை விசாரணை நடத்தக்கோரி, அவரது மனைவி ரெஹானா பானு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், மு.க.ஸ்டாலின் மற்றும் ஆ.ராசா ஆகியோருக்கு எதிராக, புலனாய்வுத்துறையிடம் தனது கணவர் சாட்சியம் அளித்ததால், பழிவாங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.


எனவே, அந்த கோணத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார். குடியரசுத் தலைவருடனான சந்திப்புக்கு பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ரெஹானா பானு, தனது கணவர் இறப்புக்கு திமுகவே காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News