Kathir News
Begin typing your search above and press return to search.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் துர்கா ஸ்டாலின் தரிசனம் - நயவஞ்சக திமுகவில் ஒரு நாத்தீகம்..!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் துர்கா ஸ்டாலின் தரிசனம் - நயவஞ்சக திமுகவில் ஒரு நாத்தீகம்..!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் துர்கா ஸ்டாலின் தரிசனம் - நயவஞ்சக திமுகவில் ஒரு நாத்தீகம்..!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 May 2019 4:25 AM GMT


தி.மு.க தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கோவில் கோவிலாக சென்று தரிசனம் செய்து வருகிறார். ஸ்டாலின் மற்றும் அவரது சகோதரி கனிமொழி இருவருமே எந்த ஒரு பிரச்சாரத்திலும் மதசார்பின்மையை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொள்வர். ஆனால் துர்கா ஸ்டாலின் அவர்கள் கோவில் கோவிலாக சென்று மனமுருகி சுவாமி தரிசனம் செய்து வருகிறார்.


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மனைவி துர்க்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் செய்தார். தூத்துக்குடி வந்திருந்த அவர், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடிஅருணாவுடன் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் வெளியே வந்த அவரிடம் திடீர் சுவாமி தரிசனம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.


அப்போது அவர் இது வழக்கமான தரிசனம் தான் என்றும் தான் எங்கே சென்றாலும் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்துவது வழக்கம் என்றும் கூறினார். சமீப காலமாக துர்கா ஸ்டாலின் அடிக்கடி கோவிலுக்கு செல்வதை பார்க்க முடிகிறது. இதற்கு முன்னதாக காசிக்கு சென்று வந்தார் துர்கா ஸ்டாலின். தற்போது திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றுள்ளார்


Next Story
கதிர் தொகுப்பு
Trending News