தூத்துக்குடி சிறுவனின் சிறுநீரக சிகிச்சைக்காக உதவிய Dr. தமிழிசை, நெகிழ்ச்சியான தருணங்கள், குவியும் பாராட்டுக்கள் !
தூத்துக்குடி சிறுவனின் சிறுநீரக சிகிச்சைக்காக உதவிய Dr. தமிழிசை, நெகிழ்ச்சியான தருணங்கள், குவியும் பாராட்டுக்கள் !
By : Kathir Webdesk
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியை சேர்ந்த காயல்பட்டினத்தில் பா.ஜ.க வின் தலைவர் தமிழிசை பிரச்சாரம் செய்த போது, அந்த பகுதியை சேர்ந்த பெண் தனது மகனின் சிறுநீரக கோளாறை சரி செய்ய உதுவுமாறு கண்ணீருடன் முறையிட்டார். அப்போது, மோடியின் ஆயுஷ்மான் திட்டத்தின் மூலம் சிறுவனுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க உதவி மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
வாக்குறுதி அளித்த படி, மகராசன் அவரின் பரிந்துரையின்படி குலசேகரம் மூகாம்பிகை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டயாலைசிஸ் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். சந்திப்பின் போது சிறுவனின் தாய், தமிழிசையை கட்டி தழுவி முத்தமிட்டார். அருகில் இருந்த அனைவரும் நெகுழ்ச்சியடைந்தனர்.
இதனை தொடர்ந்து, பா.ஜ.க மாநில தலைவர் அவர்களுக்கு பல தரப்பட்ட மக்களும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.