Begin typing your search above and press return to search.
புர்காவில் மறைத்து கடத்தப்பட்ட ₹3.80 லட்சம் மதிப்பிலான தங்க நகை பறிமுதல் - மதுரையில் பதற்றம்
புர்காவில் மறைத்து கடத்தப்பட்ட ₹3.80 லட்சம் மதிப்பிலான தங்க நகை பறிமுதல் - மதுரையில் பதற்றம்
By : Kathir Webdesk
ஐ.எஸ் தீவிரவாதிகளால் இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதன் பிறகு, பாதுகாப்பு காரணம் கருதி முகத்தை மூடி மறைக்கும் ஆடைகளுக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் விமானத்தில் மதுரை வந்த பயணியிடம் இருந்து 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 120 கிராம் எடையுள்ள தங்க செயின் பறிமுதல் செய்யப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் உள்ள சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போது, ஹமிதா பீவி என்பவரது புர்காவில் தங்க செயின் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இந்த சம்பவம் மதுரை மாநகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Picture Courtesy : Thanthi TV
Next Story