தாக்குதலுக்கு பள்ளி மாணவர்களை ஈடுபடுத்திய இசுலாமிய அமைப்பு!! பயங்கரவாதிகளின் பிடியில் தமிழகம்?
தாக்குதலுக்கு பள்ளி மாணவர்களை ஈடுபடுத்திய இசுலாமிய அமைப்பு!! பயங்கரவாதிகளின் பிடியில் தமிழகம்?
By : Kathir Webdesk
நாகை மாவட்டம் மயிலாடுதுறை தனியார் மெட்ரிக் பள்ளியில் கோடைகால ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம் நடைபெற்றுவருகிறது. இந்த முகாமில் ஏராளமானோர் தங்கி யோகாசனம், மூச்சுப்பயிற்சி, தேசபக்தி , சமூக சேவை குறித்த பல பயிற்சிகளை பெற்று வருகின்றனர். இப்பயிற்சி முகாம் ஆண்டு தோறும் வழக்கமாக நடைபெற்று வரும் ஒன்றாகும்.
இப்பயிற்சி முகாம் குறித்து அறிந்த அதே ஊரை சேர்ந்த முஸ்லிம் வாலிபர்கள் சிலர் வேண்டுமென்றே முகாம் நடைபெறும் இடத்தின் வாசல் முகப்பில் கல்லெறி சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். உள்ளே புகுந்து கலவரம் செய்ய முயற்சித்துள்ளனர். அப்போது அங்கு இரவு நேர பாதுகாப்பாளராக சுழற்சி முறையில் பணிபுரிந்த துரை சண்முகம் ( மாவட்ட பொறுப்பாளர் ) மீதும் வேண்டுமென்றே கல்வீசியுள்ளனர்.
மேலும் தகாத வார்த்தைகளால் தரக்குறைவாக பேசியுள்ளனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளை கொண்டு ஜாசிக், முகமது சபிக்,முகமது அல்பா உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மொத்தம் 16 பேர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருமே இசுலாமிய வாலிபர்கள். அவர்கள் இசுலாமிய தீவிரவாதமாக மாறியுள்ள குறிப்பிட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் என்று கூறபபடுகிறது.
இதில் ஒரு பயங்கரம் என்னவெனில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள வாலிபர்களில் சிலர் 16 வயதாகும் பள்ளிக்கூட மாணவர்கள் ஆவார்கள். இது குறித்து தகவல் அறிந்த பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பல்லை மாணவர்களை பயங்கரவாதிகளாக மாற்றும் இந்த செயல்களை அங்குள்ள இசுலாமிய மக்கள் கண்டித்து அரசு ஒத்துழைப்புடன் சரி செய்யாவிட்டால் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படும் என இதர பொது மக்கள் பேசி வருகின்றனர்.