உத்திர பிரதேசத்தில் 60 தொகுதிகளில் டெபாசிட் இழந்து வரலாறு காணாத தோல்வியை பெற்ற காங்கிரஸ்! "பிரியங்கா காந்தி" மாயை என கொக்கரித்து வழிந்த ஊடகங்கள் மன்னிப்பு கேட்குமா?
உத்திர பிரதேசத்தில் 60 தொகுதிகளில் டெபாசிட் இழந்து வரலாறு காணாத தோல்வியை பெற்ற காங்கிரஸ்! "பிரியங்கா காந்தி" மாயை என கொக்கரித்து வழிந்த ஊடகங்கள் மன்னிப்பு கேட்குமா?
By : Kathir Webdesk
காங்கிரஸ் கட்சி இந்தியா முழுக்க வரலாறு காணாத தோல்வி பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால், உத்திர பிரதேசத்தில் பிரியங்கா காந்தி வருகையால் காங்கிரஸ் கட்சி உயிர் பெற்றிருப்பதாகவும், அவர் இந்திரா காந்தி போலவே இருப்பதால் மக்கள் வழிந்து வந்து ஆதரவு தருவதாகவும் ஊடகங்கள் ஒரு மாயையை உருவாக்கின.
ஆனால், தேர்தல் முடிவுகளின் படி, காங்கிரஸ் கட்சி 60 தொகுதிகளில் கட்டுப்பணத்தை(டெபாசிட்) இழந்துள்ளது. அது போக, பல தொகுதிகளில் பா.ஜ.க-வின் வெற்றி வித்தியாச வாக்குகளை கூட காங்கிரஸ் கட்சி பெற முடியாமல் போனது என்பது தான் செய்தியே.
காந்தி குடும்ப தொகுதியான அமேதி தொகுதியில் ராகுல் காந்தி தோற்று இருக்கிறார். சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நிறுத்தாத காரணத்தினால் சோனியா காந்தி ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
ஆக, காங்கிரஸ் கட்சி உத்திர பிரதேசத்தில் சமாதி ஆகி விட்டது என்றே சொல்லலாம்.