Kathir News
Begin typing your search above and press return to search.

அமமுக மாவட்ட தலைவர் வெட்டி கொலை, முக்கிய கட்சியின் பிரமுகர்களா ??...சிவகங்கையில் பரபரப்பு!!

அமமுக மாவட்ட தலைவர் வெட்டி கொலை, முக்கிய கட்சியின் பிரமுகர்களா ??...சிவகங்கையில் பரபரப்பு!!

அமமுக மாவட்ட தலைவர் வெட்டி கொலை, முக்கிய கட்சியின் பிரமுகர்களா ??...சிவகங்கையில் பரபரப்பு!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 May 2019 7:19 AM GMT


சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பாண்டியன் நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 38) மானாமதுரை அமமுக ஒன்றிய செயலாளராக இருந்தார். இவருக்கு ஜெயலஷ்மி என்ற மனைவியும், அபிராமி சுகன்யா என்ற மகள்களும் இருந்தனர்.


சரவணன் நேற்று காலை மானாமதுரை வைகை ஆற்றில் அருகே உள்ள கல்குறிச்சி புதிய பாலத்தில் நடைப்பயிற்சி சென்றார். அப்போது பயங்கர ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சரவணனை வழிமறித்தனர். பின்னர் அந்த கும்பல் அவரை அரிவாளால் வெட்டியது.அப்போது அவர் அந்த கம்பளிடம் இருந்து தப்பிக்க அங்கிருந்து ஓடினர்.


ஆனால் அந்த கும்பல் சரவணனை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது. இதில் சரவணன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து அந்த கும்பல் சரவணனின் உடலை சாலையோரத்தில் வீசிவிட்டு சென்றது.


தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த [போலீசார் உடலை கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர்களை விசாரித்து வருகின்றனர். மேலும் சரவணன் அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா..? அல்லது டெண்டர் எடுப்பதில் ஏதேனும் பிரச்சனை காரணமாக படுகொலை செய்யப்பட்டாரா ..? என்று போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News