Kathir News
Begin typing your search above and press return to search.

அமைச்சர் பதவி வேண்டாம்! இல்லத்தில் இருந்தபடி இயன்றவரை உதவி செய்கிறேன்: மோடிக்கு அருண்ஜெட்லி பெருந்தன்மையுடன் கடிதம்!!

அமைச்சர் பதவி வேண்டாம்! இல்லத்தில் இருந்தபடி இயன்றவரை உதவி செய்கிறேன்: மோடிக்கு அருண்ஜெட்லி பெருந்தன்மையுடன் கடிதம்!!

அமைச்சர் பதவி வேண்டாம்! இல்லத்தில் இருந்தபடி இயன்றவரை உதவி செய்கிறேன்: மோடிக்கு அருண்ஜெட்லி பெருந்தன்மையுடன் கடிதம்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 May 2019 12:12 PM GMT



புதிய மத்திய அமைச்சரவையில் தனது உடல் நிலையைக் கருதி இடம்பெற விரும்பவில்லை என பிரதமர் மோடிக்கு அருண் ஜேட்லி கடிதம் எழுதியுள்ளார்.


கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி அரசில் பங்கு பெற்றிருந்தது மிகப்பெரிய கவுரவம் மற்றும் கற்றுக்கொள்வதற்கான அனுபவமாக இருந்ததாக அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் கடந்த 18 மாதங்களாக தீவிர ஆரோக்கிய பிரச்சினைகள் காரணமாக தான் சற்று பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் பொறுப்புகளில் இருந்து விலகி ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும், இது தொடர்பாக பிரச்சாரம் முடிந்து பிரதமர் கேதார்நாத் செல்லும் முன் அவரை சந்தித்து நேரில் வாய்மொழியாக தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.


சிகிச்சை மற்றும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் புதிய அரசின் பொறுப்புகளில் பங்கேற்க முடியாத நிலையில் இருப்பதாகவும், என்றாலும் தன்னால் இயன்றவரையில் அரசுக்கும் கட்சிக்கும் தேவையான உதவிகளை செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News