Kathir News
Begin typing your search above and press return to search.

தேசிய அந்தஸ்தை இழக்கும் இடதுசாரிகள்...நான்கு மாநிலங்களில் 6% வாக்குகளை கூட பெற முடியாததால் தேசிய அந்தஸ்து பறிபோனது!!

தேசிய அந்தஸ்தை இழக்கும் இடதுசாரிகள்...நான்கு மாநிலங்களில் 6% வாக்குகளை கூட பெற முடியாததால் தேசிய அந்தஸ்து பறிபோனது!!

தேசிய அந்தஸ்தை இழக்கும் இடதுசாரிகள்...நான்கு மாநிலங்களில் 6% வாக்குகளை கூட பெற முடியாததால் தேசிய அந்தஸ்து பறிபோனது!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 May 2019 6:06 AM GMT


ஒரு அரசியல் கட்சி, தேசிய கட்சியாக இருக்க வேண்டுமானால், லோக்சபா அல்லது சட்டசபை தேர்தலில் குறைந்தது 4 மாநிலங்களில் 6 சதவீத ஓட்டுகளை பெற்றிருக்க வேண்டும். மேலும் அக்கட்சிக்கு 4 லோக்சபா எம்.பி.,க்கள் இருக்க வேண்டும் என, 'தேர்தல் சின்னம் ஒதுக்கீட்டு சட்டம்- 1968' தெரிவிக்கின்றது.


இந்நிலையில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கம்யூ., கட்சிக்கு 2 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. எனவே அக்கட்சி, தேசிய கட்சி அந்தஸ்தை இழக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


இதுகுறித்து அக்கட்சியின் பொதுசெயலர் சுதாகர் ரெட்டி தெரிவித்ததாவது: இந்திய கம்யூ., தேசிய கட்சி அந்தஸ்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேசிய அளவில் கம்யூ.,க்கு செல்வாக்கு உள்ளதா என தேர்தல் கமிஷன் முடிவு செய்யும். எங்களுக்கு சாதகமாக முடிவு வரும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News