Kathir News
Begin typing your search above and press return to search.

திமுக கூட்டணி வெற்றிக்கு காரணம் 100% கிறிஸ்தவர்கள் ஓட்டும், 100% முஸ்லிம்கள் ஓட்டும்தான் - திருமாவளவன் அறிவிப்பு!!

திமுக கூட்டணி வெற்றிக்கு காரணம் 100% கிறிஸ்தவர்கள் ஓட்டும், 100% முஸ்லிம்கள் ஓட்டும்தான் - திருமாவளவன் அறிவிப்பு!!

திமுக கூட்டணி வெற்றிக்கு காரணம் 100% கிறிஸ்தவர்கள் ஓட்டும், 100% முஸ்லிம்கள் ஓட்டும்தான் - திருமாவளவன் அறிவிப்பு!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  31 May 2019 11:06 AM GMT



விடுதலை சிறுத்தைகள் என்ற பெயரில் ஜாதி கட்சியை தொடங்கி அந்த பட்டியலின சமுதாய மக்களின் மேம்பாட்டிற்காக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போடாமல், தன் சுய வளர்ச்சிக்காக அந்த அப்பாவி மக்களை தொடர்ந்து பலிகடா ஆக்கி வருகிறார் திருமாவளவன். ஜாதியை ஒழிக்க போகிறேன் என்று கூறி இவர் கட்சி தொடங்கினார். ஆனால் ஜாதியை ஒழிப்பதற்குப் பதிலாக, ஜாதி வெறுப்புணர்வை நெருப்பைமூட்டி வளர்த்துவருகிறார். இப்போது அதை உச்ச கட்டத்தில் கொண்டு வைத்திருக்கிறார் திருமாவளவன்.
இவரின் மற்றொரு அவதாரம்தான் இந்துமத வேரறுப்பு பிரகடனம். அதாவது சனாதன தர்மத்தை வேரறுக்கப் போகிறாராம். இதற்காக ஒரு மாநாட்டை நடத்தினார். அந்த மாநாட்டில் முஸ்லிம் மத வெறியர்களையும், கிறிஸ்தவ மத வெறியர்களையும் மேடையேற்றி அவர்களைக்கொண்டு இந்து மதத்தை இழிபடுத்தி பேச வைத்தார் திருமாவளவன். இதன் மூலம் இந்துக்களின் மீதான தன் வெறுப்புணர்வை, சுய அரிப்பை தீர்த்துக்கொண்டார். இருந்தபோதிலும் அவரை மன்னித்து, அவருக்கு இந்துக்கள் ஓட்டுப்போட்டனர்.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டுவிட்டார் திருமாவளவன். அதுவும் சதா இந்து மதத்தையே பழித்துப் பேசி திரியும் திமுக கூட்டணியின் சார்பாக. எப்படியாவது இந்து மதத்தை அழித்தே தீருவது என்று கங்கணம் கட்டி வேலை செய்து கொண்டிருக்கும் கி.வீரமணியின் ஆதரவோடும், அதற்கு ஒத்து ஊதிவரும் வைகோ, ஸ்டாலின் போன்றோரின் துணையோடும், பக்க வாத்தியம் வாசித்து வரும் கம்யூனிஸ்ட் கைக்கூலிகளின் வழிகாட்டுதலோடும் களம் கண்டார்.
ஆனால் அப்பன் சிவன் அவ்வளவு எளிதில் விட்டுவிடுவாரா என்ன? சனாதன தர்மமாகிய இந்து மதத்தை வேரறுப்பேன் என்று சொன்ன திருமாவளவனுக்கு வெற்றியை கொடுத்து அவரால் அதனை கொண்டாடமுடியாமல் தண்ணிகாட்டி விட்டார்.
2014 - ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்த இந்த தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன், 3 லட்சத்து 8 ஆயிரம் வாக்குகளை பெற்று இருந்தார். அப்போதும் அவர் திமுக கூட்டணியின் சார்பாகதான் போட்டியிட்டார். இந்த முறையும் அதே திமுக கூட்டணியில் சார்பில் அதே சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ஆனால் தமிழகத்தில் வெற்றி பெற்ற எம்பிக்களிலேயே மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அதாவது வெறும் 3219 ஓட்டுகள் வித்யாசத்தில் போராடி தண்ணி குடித்து வெற்றி பெற்றார்.
வாக்கு எண்ணிக்கை நாள் அன்று, செத்து செத்து பிழைத்த ஒரே வேட்பாளர் திருமாவளவன்தான். இதை அவர் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டார் என்றுதான் நினைத்தோம். ஆனால் இன்னும் பதிவிகூட ஏற்கவில்லை. அதற்குள் மீண்டும் இந்துக்களை கேவலப்படுத்தும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.
பொதுவாகவே கிறிஸ்தவ நிகழ்ச்சி அல்லது முஸ்லிம் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் இந்து விரோத கும்பல்கள் அதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு இந்துக்களை சீண்டுவதையே வேலையாக வைத்து உள்ளனர். அது கருணாநிதியாக இருந்தாலும் சரி, திருமாவளவனாக இருந்தாலும் சரி இந்துக்களை இழிவுபடத்துவதில் மிகத்தெளிவாக உள்ளனர்.
அண்மையில் கோவையில் நடந்த ஒரு முஸ்லிம் திருமாண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முக ஸ்டாலின், இந்துக்களின் திருமண சடங்குகளை மிக கீழ்த்தரமாக விமர்சித்தார். இப்போது திருமாவளவன், திமுக கூட்டணிக்கு ஓட்டுப்போட்ட இந்துக்களை கேவலப்படுத்தி உள்ளார்.
ரம்ஜான் நோன்பு திறப்பு என்ற பெயரில் ஒரு நிகழ்சிக்கு திருமாவளவன் ஏற்பாடு செய்து, அதில் முஸ்லிம்கள் முன்னிலையில் பேசும்போது, இந்துக்களின் ஓட்டுகளால் திமுக கூட்டணி வெற்றி பெறவில்லை என்பதுபோல் விசத்தைக் கக்கி உள்ளார். ஏதோ கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் மட்டுமே ஓட்டுப்போட்டு திமுக கூட்டணியை வெற்றிபெறச் செய்துள்ளனர் என்ற ரீதியில் பேசி, திமுக கூட்டணிக்கு ஓட்டுப்போட்ட இந்துக்களை செருப்பால் அடித்து அவமானப்படுத்துபோல் திருவாய் மலர்ந்துள்ளார்.
100 சதவீத முஸ்லீம்களும், 100 சதவீத கிறிஸ்தவர்களும் திமுக கூட்டணிக்கு ஓட்டு போட்டுள்ளனர். இதனால்தான் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது என்கிற தன் இந்து விரோத கருத்தை திருமாவளவன் 100 சதவீதம் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார். இதன் மூலம் திருமாவளவன், வைகோ, கி.வீரமணி, முக ஸ்டாலின் போன்றவர்கள் ஒருபோதும் திருந்தமாட்டார்கள் என்பதை இந்துக்கள் தெளிவாக புரிந்துகொள்ளலாம்.
இந்துக்கள் ஓட்டுப்போடாமல்தான் திமுக கூட்டணி வெற்றி பெற்றிதா? இந்துக்கள் ஓட்டு போடாமல்தான் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் 500,229 ஓட்டுக்கள் வாங்கினாரா?
எவ்வளவு கேவலமாக, கீழ்த்தரமாக திட்டினாலும், இழிவுபடுத்தினாலும், இந்துக்கள் மீண்டும் மீண்டும் திமுக கும்பல்களுக்கு ஓட்டுபோடுவதால்தான், திருமாவளவன் போன்றவர்கள் இப்படியெல்லாம் பேசி வருகின்றனர்.


திருமாவளவனுக்கு ஓட்டுப்போட்ட இந்துக்கள் இப்போது என்ன செய்யப்போகிறீர்கள்? அதேபோல, திமுக கூட்டணிக்கு ஓட்டுப்போட்ட இந்துக்கள் இப்போது என்ன செய்யப்போகிறீர்கள்?




https://www.youtube.com/watch?v=45MfTAUHs5g

Next Story
கதிர் தொகுப்பு
Trending News