மாடை கடவுள் என்றால், நான் கடவுளை சாப்பிடுபவன் : தமிழ் இனத்தை கொச்சைப்படுத்திய பா. ரஞ்சித்
மாடை கடவுள் என்றால், நான் கடவுளை சாப்பிடுபவன் : தமிழ் இனத்தை கொச்சைப்படுத்திய பா. ரஞ்சித்
By : Kathir Webdesk
இயக்குனர் பா.ரஞ்சித் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், தமிழ் மன்னர் ராஜ ராஜ சோழனின் ஆட்சி காலம் தான் தமிழர்களின் இருண்ட காலம் என கூறிப்பிட்டார். மேலும் அவர் பேசுகையில் பல சாதிக்கார்கள் ராஜ ராஜ சோழன் தங்கள் சாதி தான் என்று போட்டி போடுகின்றனர் . ஆனால் ராஜ ராஜ சோழன் எனது சாதியாக இருக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை,
ராஜ ராஜ சோழனின் ஆட்சி காலத்தில் அவரின் சூழ்ச்சியால் நான் சார்ந்த எங்கள் சாதிகாரர்கள் (தலித்துகள்) நிலம் பறிக்கபட்டது என்றும். பெண்களை விலை மாதுவாக மாற்றி தேவதாசி அமைப்பு முறையை நடைமுறை படுத்திய அயோக்கியன் தான் ராஜ ராஜ சோழன் என தமிழர்களால் போற்றப்படும் மாமன்னர் ராஜ ராஜ சோழனை மிக கடுமையாக பேசினார் பா.ரஞ்சித்.
இயக்குனர் பா.ரஞ்சித் பேச்சுக்கு பலர் தங்கள் எதிர்பை தெரிவித்துள்ளனர். இது குறித்து தமிழ் ஆர்வலர்கள் கூறுகையில் வரலாறு தெரியாமல் பா.ரஞ்சித் உளறுகிறார் என்று குறிப்பிட்டுள்ளனர்.
அதே நிகழ்ச்சியில் அவர் தொடர்ந்து பேசுகையில், ஹிந்து மதத்தையும், தமிழ் இனத்தையும் அவர் இழிவுபடுத்தி பேசியுள்ளார். இதனால் கோடிக்கணக்கான ஹிந்துக்கள் மற்றும் தமிழர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளனர். "மாடு உனக்கு கடவுள் என்றால், கடவுளை சாப்பிடுபவன் நான்", என்று கூறியுள்ளார். மாடை கடவுளாக வணங்குவது தமிழ் இனத்தின் கலாச்சாரம்.
ஜல்லிக்கட்டிற்கு காங்கிரஸ்-தி.மு.க ஆளும் போது, தடை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து தமிழர்களின் பண்பாடான ஜல்லிக்கட்டை காப்பாற்ற வரலாறு காணாத அளவிற்கு இளைஞர்கள் புரட்சியில் ஈடுப்பட்டனர். பிறகு பா.ஜ.க-அ.தி.மு.க அரசுகளின் நடவடிக்கையால் மீண்டும் தமிழர்களின் பாரம்பரியம் காப்பாற்றப்பட்டது. பசுக்களையும், காளைகளையும் தமிழர்கள் கடவுள்களாக வணங்கி வருகின்றனர். இந்த நிலையில், ஒட்டு மொத்த தமிழ் இனத்தையும் இழிவுபடுத்தும் வகையில், மாடு கடவுள் என்றால், நான் கடவுளை சாப்பிடுபவன் என்ற இயக்குனர் ரஞ்சித்தின் இன வெறி பேச்சு தமிழர்களை கொதிப்படைய செய்துள்ளது.
இது போன்று, ஜாதி வெறி, இன வெறி பிடித்த ஒருவருக்கா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாய்ப்பாளித்து வந்தார் என்று பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.