முஸ்லிம்களில் யாராவது பிரபாகரனைப்போல வர நினைத்தால் ஒழித்துவிடுவோம் ! இலங்கை ஜனாதிபதி கடும் எச்சரிக்கை !!
முஸ்லிம்களில் யாராவது பிரபாகரனைப்போல வர நினைத்தால் ஒழித்துவிடுவோம் ! இலங்கை ஜனாதிபதி கடும் எச்சரிக்கை !!
By : Kathir Webdesk
இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியான முல்லைத்தீவில் நேற்று ஒரு அரசு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அந்த நாட்டு அதிபர் மைத்ரிபால சிரிசேனா பேசுகையில் " நாடு மதவாதிகளாலும், சில அரசியல்வாதிகளாலும் இன்று பிரிந்து கிடக்கிறது.
முஸ்லிம் சமுதாயத்தினர் பிரபாகரனைப்போன்ற ஒரு தலைவனை உருவாக்க இடம் கொடுக்கக் கூடாது. அது போன்ற நிலை ஏற்பட்டால் நாங்கள் சும்மாக இருக்க மாட்டோம். இரண்டாவது போரை நாடு விரும்பவில்லை. மக்கள் எந்த பிரிவினைவாதிகளுக்கும் இடம் கொடுத்து விடக்கூடாது. தமிழ் மக்களின் துயரத்தை புரிந்து கொண்டு செயல்படுகிறோம். இனி வளர்ச்சிதான் நமக்கு முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் வடக்கு மற்றும் கிழக்கு இலங்கை பகுதிகளை தன கைவசம் வைத்திருந்தார். 2௦௦9 போரில் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பிறகு, கிழக்கு மாகாணப்பகுதிகளில் முஸ்லிம்கள் குடி புகுந்தனர். அங்கு தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் முஸ்லிம்கள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அங்கு புதிய முஸ்லிம் தலைவர்கள் தோன்றி வடக்கு மாகாணம் தமிழர்களுக்கு போல, கிழக்கு மாகாணம் தங்களுக்குதான் எனக்கூறி மக்களிடையே விஷம பிரச்சாரங்களிலும், பிரிவினை பிரச்சாரங்களிலும் ஈடுபட்டுள்ளனர். இதை கண்டிக்கத்தான் அதிபர் சிரிசேனா இவ்வாறு கூறியிருக்கக் கூடும் என தெரிகிறது.