வசமாய் சிக்கிய ரஞ்சித்.. வைத்து இறக்கும் காவல்துறை - இன்றைய நாளின் தரமான சம்பவம்.!
வசமாய் சிக்கிய ரஞ்சித்.. வைத்து இறக்கும் காவல்துறை - இன்றைய நாளின் தரமான சம்பவம்.!
By : Kathir Webdesk
அட்டகத்தி, மெட்ராஸ், காலா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநா் பா.ரஞ்சித்.
பா.ரஞ்சித் அண்மையில், தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினாா். அப்போது, சோழ மன்னர் ராஜராஜ சோழன் காலத்தில் தான் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலம் அபகரிக்கப்பட்டது. ராஜராஜ சோழனின் ஆட்சி காலம் தான் இருண்ட காலம் என்று பேசியிருந்தாா்.
இயக்குநா் ரஞ்சித்தின் கருத்து பெரும் சா்ச்சையை கிளப்பி உள்ளது. அவருக்கு எதிராக சமூக வலைதளத்தில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. ராஜராஜ சோழன் குறித்து அவதூறாக பேசி வரும் இயக்குநா் பா.ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் காவல்நிலைய போலீசார் ராஜராஜசோழன் பற்றி அவதூறாக பேசியதாக இயக்குநர் ரஞ்சித் மீது 2 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவல் ஆய்வாளர் தாமாக முன்வந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.