Begin typing your search above and press return to search.
இறைச்சிக்காக நாய்கள் கடத்தலா.? ஒரே ஒரு வீடியோவால் வந்த வினை : அதிர்ச்சியில் பொதுமக்கள்.!
இறைச்சிக்காக நாய்கள் கடத்தலா.? ஒரே ஒரு வீடியோவால் வந்த வினை : அதிர்ச்சியில் பொதுமக்கள்.!
By : Kathir Webdesk
கர்நாடகாவில், இறைச்சிக்காக நாய்கள் கடத்தப்படுவதாக சர்ச்சை எழுந்த நிலையில், வெறிபிடித்த நாய்களை வேறு இடத்துக்கு கொண்டு செல்லவே வாகனத்தில் ஏற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில் உள்ள பத்கல் டவுனில், வெறிபிடித்த சில தெருநாய்கள் அந்த பகுதி வழியாக செல்வோரை கடித்து குதறியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அப்பகுதியில் சுற்றித்திரிந்த 22 தெருநாய்களை வாகனத்தில் ஏற்றி வேறு இடத்துக்கு கொண்டு சென்று விட்டுள்ளனர்.
இதனை வீடியோ எடுத்த மர்ம நபர்கள் சிலர், இறைச்சிக்காக நாய்கள் கடத்தப்படுவதாக வலைதளத்தில் பதிவு செய்து சர்ச்சையை ஏற்படுத்தினர். ஆனால் வெறிபிடித்த நாய்களை அப்புறப்படுத்தவே அப்பகுதி மக்கள் அதனை வாகனத்தில் ஏற்றிச் சென்றதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Next Story