Kathir News
Begin typing your search above and press return to search.

மேற்கு வங்கத்தில் இன்றும் ஒரு பா.ஜ.க தொண்டர் கழுத்தை அறுத்து கொடூர கொலை! மம்தாவே காரணம் என கொந்தளிக்கும் வங்கம்!!

மேற்கு வங்கத்தில் இன்றும் ஒரு பா.ஜ.க தொண்டர் கழுத்தை அறுத்து கொடூர கொலை! மம்தாவே காரணம் என கொந்தளிக்கும் வங்கம்!!

மேற்கு வங்கத்தில் இன்றும் ஒரு பா.ஜ.க தொண்டர் கழுத்தை அறுத்து கொடூர கொலை!  மம்தாவே காரணம் என கொந்தளிக்கும் வங்கம்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Jun 2019 5:01 AM GMT


மேற்கு வங்கத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பாஜக வேகமான வளர்ச்சியை பெற்று வருகிறது. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல்களிலும், மக்களவை தேர்தலிலும் மாபெரும் வெற்றியை அந்த கட்சி பெற்றுள்ளது. இதனிடையே கட்சியின் வளர்ச்சியை பொறுக்க முடியாத மம்தா கட்சியினர் பாஜக தொண்டர்களை கொலை செய்து வருகின்றனர். இந்து வரை 80 க்கும் மேற்பட்ட பாஜகவினர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.


சென்ற மே மாதம் கடைசி தேதியில் சுஷில் மண்டல் என்ற பாஜக கட்சி நிர்வாகி கிழக்கு பர்த்வார் மாவட்டத்தில் கொலை செய்யப்பட்டார். சென்ற வியாழக்கிழமை வடக்கு பர்கானா மாவட்டத்தை சேர்ந்த சரஸ்வதி தாஸ் என்கிற பெண் பாஜக நிர்வாகி மம்தா ஆதரவாளர்களால் கொலை செய்யப்பட்டார்.


இந்த நிலையில் தேர்தல் தகராறில் பழி தீர்க்கும் விதமாக இன்று ஆனந்தபால் என்கிற பாரதீய யுவ மோர்ச்சாவை சேர்ந்தவர் திருநாமூல் காங்கிரஸ் குண்டர்களால் மூர்கத்தனமாக கழுத்தை வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கு காரணம் மம்தாவின் இரக்கமற்ற, ஆத்திர குணம்தான் எனவும் கட்சியினர் தெரிவித்துள்ளனர். இவ்வளவு கொலைகள் நடந்தும் இதுவரை மம்தா கட்சியினரை கண்டித்தது இல்லை என்றும், மறைமுகமாக அவர் வன்முறைகளை தூண்டுவதாகவும் பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.


Source :https://www.opindia.com/2019/06/coochbehar-another-bjp-karyakarta-murdered-in-west-bengal-party-blames-mamata-banerjee-led-trinamool-congr



Next Story
கதிர் தொகுப்பு
Trending News