Kathir News
Begin typing your search above and press return to search.

மகிழ்ச்சியில் சிறு வியாபாரிகள் - ஜி.எஸ்.டி. முறையில் மேற்கொள்ளப்படும் அதிரடி மாற்றம் : மெறுகேற்றப்படும் வரிவிதிப்பு.!

மகிழ்ச்சியில் சிறு வியாபாரிகள் - ஜி.எஸ்.டி. முறையில் மேற்கொள்ளப்படும் அதிரடி மாற்றம் : மெறுகேற்றப்படும் வரிவிதிப்பு.!

மகிழ்ச்சியில் சிறு வியாபாரிகள் - ஜி.எஸ்.டி. முறையில் மேற்கொள்ளப்படும் அதிரடி மாற்றம் : மெறுகேற்றப்படும் வரிவிதிப்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 July 2019 10:01 AM GMT


ஜிஎஸ்டி அமலுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பல்வேறு புதிய சீர்திருத்தங்களை மத்திய அரசு இன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்கும் நோக்கத்துடன் 17 வகையான வரிகளை ஒன்றிணைத்து ஜி.எஸ்.டி. என்ற ஒற்றை வரிவிதிப்பு முறை கடந்த 2017 ஜூலை ஒன்றாம் தேதி அமல்படுத்தப்பட்டது.


இந்நிலையில், நிதித்துறை அதிகாரிகளுடன் நிதி மற்றும் கம்பெனி விவகாரங்கள்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆலோசனை நடத்த இருப்பதாகவும், ஜி.எஸ்.டி.யில் பல்வேறு சீர்திருத்தங்களை வெளியிட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


ரிட்டன் தாக்கல் செய்வது எளிமையாக்கப்பட்டு புதிய ரிட்டன் முறை அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது தவிர ரொக்க வசூல் பதிவேடுகளில் சீர்திருத்தம் செய்யப்படவும் வாய்ப்புள்ளது. கூடுதலாக செலுத்திய வரித்தொகையை திரும்பப் பெறுவதற்கான வழிமுறைகளும் எளிதாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


வரி செலுத்தக்கூடிய சிறு வியாபாரிகளுக்கு நன்மை அளிக்கக் கூடிய வகையில் இந்த சீர்திருத்தங்கள் இடம் பெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வரிவிகிதங்கள் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News