ராணுவத்தில் 2 மாத பயிற்சியைத் தொடங்கினார் தோனி! பெங்களூரு பாரசூட் ரெஜிமென்டில் சேர்ந்தார்!!
ராணுவத்தில் 2 மாத பயிற்சியைத் தொடங்கினார் தோனி! பெங்களூரு பாரசூட் ரெஜிமென்டில் சேர்ந்தார்!!
By : Kathir Webdesk
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திரசிங் தோனி, பெங்களூருவில் உள்ள இந்திய ராணுவத்தின் பாரசூட் ரெஜிமென்டில் சேர்ந்து 2 மாத பயிற்சியை இன்று தொடங்கினார்.
இந்திய ராணுவ பாரசூட் ரெஜிமென்டில் தோனி லெப்டினென்ட் அந்தஸ்தில் 2011-ஆம் ஆண்டில் இருந்து பதவி வகித்து வருகிறார். அவ்வப்போது ராணுவத்தில் சேர்ந்து தோனி, பயிற்சி பெற்று வருகிறார். தோனி ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெறுவது வளரும் இளைஞர்களை ராணுவப் பணியில் ஆர்வத்துடன் சேர்வதற்கு வழி வகுக்கும் என்பதால், அதற்கான விழிப்புணர்வாக தோனி அதைச் செய்து வருகிறார்.
இதற்கிடையே ராணுவ பாரசூட் ரெஜிமென்டின் அனுமதிக்காக காத்திருந்த தோனிக்கு, கடந்த வாரம் ராணுவத்தில் இருந்து ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று தோனி 106 பாரா டிஏ பாரசூட் ரெஜிமென்டில் முறைப்படி சேர்ந்துள்ளார்.
தோனி ராணுவத்தில் சேர்ந்து ஆர்வத்துடன் பயிற்சி பெறுவது இளைஞர்களுக்கு ஊக்கமாக இருக்கும்.