“பாராளுமன்ற அவையில் எச்சரிக்கை விடுக்கும் வேலை கூடாது” - வைகோவுக்கு வெங்கையா நாயுடு எச்சரிக்கை!!
“பாராளுமன்ற அவையில் எச்சரிக்கை விடுக்கும் வேலை கூடாது” - வைகோவுக்கு வெங்கையா நாயுடு எச்சரிக்கை!!
By : Kathir Webdesk
“பாராளுமன்ற அவையில் கருத்துக்களை மட்டும் கூறுங்கள், எச்சரிக்கை விடுக்கும் வேலையெல்லாம் கூடாது” என்று வைகோவுக்கு துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு எச்சரிக்கை விடுத்தார்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மாநிலங்களவையில் பேசும்போது, “எங்களின் எதிர்ப்பை மீறி ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எந்த எதிர்ப்பு வந்தாலும் இந்த திட்டத்தை நிறைவேற்றுவோம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசி உள்ளார். இந்த திட்டத்தை செயல்படுத்த முயன்றால், மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டம் வெடிக்கும்” என்று வைகோ பேசினார்.
அப்போது அவையை நடதிக்கொண்டிருந்த வெங்கையா நாயுடு, “மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வேலையெல்லாம் கூடாது” எனக்று வைகோவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் புலி என்று தன்னை பறைசாற்றிக்கொள்ள, பொதுக்கூட்ட மேடையில் பேசுவதுபோல பேசப்போய் கைகோ வாங்கிக்கட்டிக்கொண்டதுதான் மிச்சம்.