Kathir News
Begin typing your search above and press return to search.

மக்கள் தந்த தனிப் பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டினார் எடியூரப்பா! சபையில் 106 கைகள் ஆதரவாக உயர்ந்தன !!

மக்கள் தந்த தனிப் பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டினார் எடியூரப்பா! சபையில் 106 கைகள் ஆதரவாக உயர்ந்தன !!

மக்கள் தந்த தனிப் பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டினார் எடியூரப்பா! சபையில் 106 கைகள் ஆதரவாக உயர்ந்தன !!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 July 2019 12:03 PM GMT


சென்ற ஜூலை 23 ல் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் குமாரசாமி தோற்றார். அவருக்கு 99 பேர் தான் ஆதரவளித்தனர். 107 பேர் எதிர்த்து வாக்களித்தனர். இதனால் குமாரசாமி அரசு கவிழந்தது.பின்னர் கவர்னர் வாஜூபாய் வாலா எடியூரப்பாவிற்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.


இந்தநிலையில் நேற்று, (ஜூலை 28) கர்நாடக சபாநாயகர் ராஜினமா செய்திருந்த 17 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்தார். அதன்பின்னர் இன்று நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், மொத்தமிருந்த 208 பேரில் எடியூரப்பாவிற்கு ஆதரவாக குரல் ஓட்டெடுப்பில் 106 ஓட்டுக்கள் பெற்று வெற்றிபெற்றார்.


சட்டப்பேரவையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அரசு குரல் வாக்கெடுப்பில் வென்றதாக சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் அறிவித்தார்.


நம்பிக்கை ஓட்டெடுப்பிற்கு பி்ன்னர் கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார், தனது பதவியை ராஜினமா செய்தார். அவருக்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் எழுந்து நின்று மரியாதை செய்தனர்.


அதன்பின் முந்தைய குமாரசாமி அரசு கொண்டு வந்த நிதி மசோதாவை முதல்வர் எடியூரப்பா தாக்கல் செய்தார். அந்த மசோதாவில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் தாக்கல் செய்து அது அவையில் நிறைவேற்றப்பட்டது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News