“மக்களின் எதிர்ப்பால்தான் ஓராண்டாக தொகுதி பக்கம் தலைகாட்ட முடியவில்லை” - கருணாஸ் எம்.எல்.ஏ ஒப்புதல் வாக்குமூலம்!!
“மக்களின் எதிர்ப்பால்தான் ஓராண்டாக தொகுதி பக்கம் தலைகாட்ட முடியவில்லை” - கருணாஸ் எம்.எல்.ஏ ஒப்புதல் வாக்குமூலம்!!
By : Kathir Webdesk
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தயவால் அ.தி.மு.க கூட்டணி மூலம் திருவாடானை தொகுதியில் இருந்து வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார், நடிகர் கருணாஸ். கிறிஸ்தவரான கருணாஸ், ஒட்டு மொத்த தேவர் சமுதாயத்திற்கும் தான்தான் பிரதிநிதி என்பதுபோல “பில்டப்” செய்து வந்தார்.
கொஞ்சம்கூட நன்றி விஸ்வாசமே இல்லாமல் அ.தி.மு.க.வின் பரம எதிரியான, தி.மு.க. தலைவர் ஸ்டாலினுடன் சேர்ந்துகொண்டு தன்னை வெற்றிபெறச் செய்த அதே அ.தி.மு.க.விற்கு எதிராக செயல்பட்டு வந்தார். ஒரு கட்டத்தில் முதல்வரையே மிரட்டும் அளவிற்கு சென்றார்.
இவரின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வந்த திருவாடானை தொகுதி மக்கள், கருணாசை புறக்கணித்தனர். அவரை தொகுதி பக்கம் வரவிடாமல் துரத்தியடித்தனர். இதனால் தொகுதி பக்கமே தலைகாட்டாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து திருவாடானை தொகுதி பிரச்சினைகள் தொடர்பாக மனு கொடுக்கும் நாடகத்தை அரங்கேற்றினார் கருணாஸ்.
திடீரென ராமநாதபுரத்தில் கருணாசை பார்த்த நிருபர்கள், அவரிடம் மைக்கை நீட்டினர். அதோடு நில்லாமல் “ஏன் தொகுதி பக்கமே வரவில்லை” என்ற கேள்வியையும் முன்வைத்தனர்.
இதனை சற்றும் எதிர்பாராத கருணாஸ், தனது பிரமாதமான நடிப்பின் மூலம் சமாளித்தார். இருந்தாலும் மக்கள் என்னை தொகுதி பக்கம் வரவிடாமல் துரத்தியடிக்கின்றனர் என்பதையும் பேச்சுவாக்கில் கக்கிவிட்டார். “மக்கள் எதிர்ப்பால்தான், ஓராண்டாக என்னால் தொகுதி பக்கம் வர முடியவில்லை” என்று நிருபர்களிடம் தெரிவித்தார் கருணாஸ்.
“ஓராண்டு என்பது தவறு, தொகுதி பக்கம் வரவே இல்லை” என்கின்றனர் திருவாடானை தொகுதி மக்கள். ஆனால், தொகுதி மக்கள் துரத்தியடிக்கின்றனர் என்பது உண்மையே என்கின்றனர் அவர்கள்
வெற்றி பெற்றபிறகு தொகுதி பக்கம் தலைகாட்டாமல் இருந்தால் என்ன செய்வார்கள் மக்கள்?