Kathir News
Begin typing your search above and press return to search.

“உங்கள் மகன்கள், பயங்கரவாதி ஆவதை நீங்கள்தான் தடுக்க வேண்டும்” - காஷ்மீர் பெற்றோர்களுக்கு ராணுவம் எச்சரிக்கை!!

“உங்கள் மகன்கள், பயங்கரவாதி ஆவதை நீங்கள்தான் தடுக்க வேண்டும்” - காஷ்மீர் பெற்றோர்களுக்கு ராணுவம் எச்சரிக்கை!!

“உங்கள் மகன்கள், பயங்கரவாதி ஆவதை நீங்கள்தான் தடுக்க வேண்டும்” - காஷ்மீர் பெற்றோர்களுக்கு ராணுவம் எச்சரிக்கை!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Aug 2019 12:00 PM GMT



ராணுவம் காஷ்மீரில் பயங்கரவாத செயல்களை தடுக்கும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமானப்படையின் எல்லைத் தாண்டிய துல்லிய தாக்குதல் மூலம், பாகிஸ்தானில் இருந்து வரும், முஸ்லிம் பயங்கரவாதிகளின் ஊடுருவல் தடுக்கப்பட்டுள்ளது.


இருப்பினும் பாகிஸ்தானில் இருந்து இயக்கப்படும் பயங்கரவாதிகளின் செயல் காஷ்மீரில் நீடித்து வருகிறது. காஷ்மீர் இளைஞர்களை தவறாக வழிநடத்தும் பயங்கரவாதிகளையும், அவர்களின் ஆதரவாளர்களையும் முற்றிலுமாக ஒழிக்கும் பணியில் தேசிய புலனாய்வு பிரிவுவும், உளவுப்பிரிவும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.


இந்நிலையில், காஷ்மீர் மக்களுக்கு ராணுவ அதிகாரிகள், எச்சரிக்கை விடுத்துள்ளனர். “உங்கள் மகன்கள், பயங்கரவாதிகளாக மாறுவதை, நீங்கள்தான் தடுக்க வேண்டும்” என்று அந்த எச்சரிக்கையில் தெரிவித்துள்ளனர்.


காஷ்மீரில் முஸ்லிம் பயங்கரவாதிகளை முற்றிலுமாக அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-


500 ரூபாய்காக நமது ராணுவ வீரர்கள் மீது கற்களை வீசத் தொடங்கும் சிறுவர்களில், 83% பேர் பின்னர் துப்பாக்கியை எடுக்கின்றனர். அத்துடன் அவர்களின் வாழ்க்கை முடிந்து போகிறது. எனவே அவர்களை பெற்றோர்தான் தடுக்க வேண்டும்.


காஷ்மீரில், முஸ்லிம் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்து துப்பாக்கி எடுக்கும் இளைஞர்களில் பெரும்பாலானவர்கள், முதல் ஆண்டிலேயே கொல்லப்படுகிறார்கள். தவறான பாதையில் சென்றவர்கள், உடனே ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு அமைதி வழிக்கு திரும்பிவிடுங்கள்.


இவ்வாறு பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News