7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அஸ்ரப் அலி- தூக்கு தண்டனை கைதிக்கு வாழ்நாள் சிறை மட்டுமே ?
7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அஸ்ரப் அலி- தூக்கு தண்டனை கைதிக்கு வாழ்நாள் சிறை மட்டுமே ?
By : Kathir Webdesk
புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அஸ்ரப் அலி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இவரின் வயது 68 ஆலங்குடி கலிஃபுல்லா நகரைச் சேர்ந்தவர் இவர் வீட்டின் அருகே உள்ள 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 3.9.2018 அன்று இது குறித்து சிறுமியின் குடும்பத்தார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது வழக்கை விசாரித்த நீதிபதி ராஜ லட்சுமி தீர்ப்பு வழங்கினார்
தீர்ப்பின் படி சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த அஸ்ரப் அலிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் கட்டத்தவறினால் மேலும் 6 மாத கால சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக 7 லட்ச ரூபாய் அரசு தர வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு தூக்கு தண்டனை என்று சட்டம் இருக்கும் நிலையில் புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.