காஷ்மீர் பொதுமக்களுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்!
காஷ்மீர் பொதுமக்களுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்!
By : Kathir Webdesk
காஷ்மீர் சிரப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு காஷ்மீர் சென்றுள்ளார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சோபியான் மாவட்டத்தில் பொது மக்களுடன் ஆலோசனைகளை மேற்கொண்டார் . பொதுமக்களுடன் இணைந்து மதிய உணவையும் உட் கொண்டார்.
பின்னர் அஜித் தோவல் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பயங்கரவாதி புர்ஹான் வானி சுட்டு கொல்லப்பட்டதை தொடர்ந்து போராட்டங்கள் நடந்த சோபியான் மாவட்டத்திற்கு சென்றார் தோவல், அங்கு போலீசாருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் பாதுகாப்பு படை வீரர்களை சந்தித்து பேசினார்.
தொடர்ந்து, சோபியான் மாவட்டத்தில், உள்ளூர் மக்களை சந்தித்து கலந்துரையாடினார். அவர்களுடன் மதிய உணவு அருந்தினார்.சோபியான் மாவட்டத்தில், சூழ்நிலை தற்போது சுமூகமாகவும், அமைதியாகவும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.