Kathir News
Begin typing your search above and press return to search.

அத்திவரதர் வைபவத்தை அடுத்து காஞ்சிபுரம் நகரை சுத்தம் செய்ய களம் இறங்கிய ஹிந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள்

அத்திவரதர் வைபவத்தை அடுத்து காஞ்சிபுரம் நகரை சுத்தம் செய்ய களம் இறங்கிய ஹிந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள்

அத்திவரதர் வைபவத்தை அடுத்து காஞ்சிபுரம் நகரை சுத்தம் செய்ய களம் இறங்கிய ஹிந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Aug 2019 6:05 AM GMT

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் அத்திவரதர் பெருவிழா கடந்த ஜூலை மாதம் முதல் தேதி தொடங்கி ஆக.17 -ஆம் தேதி வரைதொடர்ந்து 48 நாட்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி ஜூலை மாதம் முழுவதும் 31 நாள்களுக்கு பெருமாள் சயனக்கோலத்திலும், ஆக. 1 -ஆம் தேதி முதல் நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் 47 -ஆவது நாளான கடந்த வெள்ளிக்கிழமை பெருமாள் வெந்தய நிறப் பட்டாடையும், ரோஜா நிற அங்கவஸ்திரமும் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெருமாளுக்கென்று பிரத்யேகமாக செய்யப்பட்டிருந்த பாதாம்பருப்பு, முந்திரி மாலையும், கதம்ப மாலைகளும் அணிந்திருந்தார்.
சகஸ்ர நாம அர்ச்சனை கோயில் பட்டாச்சாரியார்களால் நடத்தப்பட்டது.
வெள்ளிக்கிழமை இரவு 9 மணி அளவில் ராஜகோபுர வாசல் மூடப்பட்டது. அப்போது கோவில் வளாகத்திற்குள் காத்திருந்த பத்தர்கள் மட்டும் அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். இரவில் நீண்ட நேரம் தரிசனம் நீடித்தது. அதன்பின்னர் அன்று இரவுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவடைந்தது.
வெள்ளிக்கிழமை வரை அத்திவரதரை தரிசித்த பக்தர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டிவிட்டதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், கடந்த 48 நாட்களாக பக்தர்கள் வந்து சென்ற காஞ்சிபுரம் அத்தி வரதர் வைபவம் நடைபெற்ற இடங்களை சுத்தம் செய்ய, ஹிந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் களம் இறங்கியுள்ளன. இவர்களுடன் சேர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் திரு பொன் ராதாகிருஷ்ணன் அவர்களும் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
https://twitter.com/PonnaarrBJP/status/1162940912411930624?s=19
Next Story
கதிர் தொகுப்பு
Trending News