Kathir News
Begin typing your search above and press return to search.

காரிலிருந்து இறங்கி பாதிவழியில் தப்பி ஓடிய ப.சிதம்பரம்!

காரிலிருந்து இறங்கி பாதிவழியில் தப்பி ஓடிய ப.சிதம்பரம்!

காரிலிருந்து இறங்கி பாதிவழியில் தப்பி ஓடிய ப.சிதம்பரம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Aug 2019 9:13 AM GMT


ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்து விசாரிக்க சி.பி.ஐ முயன்று வருகிறது .ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட் மறுத்துவிட்டது. இதையடுத்து இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ப.சிதம்பரத்திடம் நேரடியாக விசாரணை நடத்தி அவரை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
இந்நிலையில் ப.சிதம்பரம் முன் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.


இதனிடையே கடந்த 24 மணிநேரத்தில் 4 முறை சிதம்பரம் வீட்டிற்கு சென்ற சிபிஐ அவரை காணவில்லை என ஏமாற்றத்துடன் திரும்பினர். மேலும் ப.சிதம்பரத்திற்கு எதிராக லுக் அவுட் நோட்டிஸும் பிறப்பித்தனர்.


இந்நிலையில், நேற்று பாதி வழியில் இறங்கிய ப.சிதம்பரம் எங்கே சென்றார் எனத் தெரியவில்லை என அவரின் கார் ஓட்டுநர் தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறை சிதம்பரத்தின் கார் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தியபோது அவர் இதை தெரிவித்தார். ப.சிதம்பரம் இதுவரை எங்கே இருக்கிறார் எனத் தெரியவில்லை என சி.பி.ஐ தெரிவித்துள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News