Kathir News
Begin typing your search above and press return to search.

நளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் ! மகளின் திருமண சடங்குகளுக்காக நீதிமன்றம் ஒப்புதல்!!

நளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் ! மகளின் திருமண சடங்குகளுக்காக நீதிமன்றம் ஒப்புதல்!!

நளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் ! மகளின் திருமண சடங்குகளுக்காக நீதிமன்றம் ஒப்புதல்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Aug 2019 12:20 PM GMT


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினியின் மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய பரோல் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு அளித்திருந்தார். அதன்படி கடந்த 5-ம் தேதி நிபந்தனைகளுடன் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. அதன்படி, கடந்த மாதம் 25-ம் தேதி 30 நாட்கள் பரோலில் சிறையில் இருந்து நளினி வெளியே வந்தார். இவருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதித்துள்ளது.


இந்த சூழலில் மகளின் திருமண ஏற்பாடுகளை முடிக்க முடியவில்லை என்றும், பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க தமிழக அரசு, சிறைத்துறையிடம் கோரியிருந்தார். சென்னை உயர்நீதிமன்றத்திலும் நளினி மனு அளித்திருந்தார். இதற்கு தமிழக அரசும், சிறைத்துறையும் பதிலளிக்க வேண்டும் என்று கூறி வழக்கு ஆகஸ்ட் 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


அதன்படி, இன்று விசாரணை நடைபெற்ற நிலையில், நளினிக்கு மேலும் 3 வார காலம் பரோல் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஏற்கனவே விதிக்கப்பட்ட நிபந்தனைகளை பின்பற்றவும் நளினிக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News