Kathir News
Begin typing your search above and press return to search.

திருமலையில் கிறிஸ்தவ மத பிரச்சாரம்! தேர்தலின்போது தாய் மதம் திரும்பியதாக நாடகமாடிய ஜெகன் மோகன் ரெட்டியின் கிறிஸ்தவ மத வெறி!!

திருமலையில் கிறிஸ்தவ மத பிரச்சாரம்! தேர்தலின்போது தாய் மதம் திரும்பியதாக நாடகமாடிய ஜெகன் மோகன் ரெட்டியின் கிறிஸ்தவ மத வெறி!!

திருமலையில் கிறிஸ்தவ மத பிரச்சாரம்! தேர்தலின்போது தாய் மதம் திரும்பியதாக நாடகமாடிய ஜெகன் மோகன் ரெட்டியின் கிறிஸ்தவ மத வெறி!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Aug 2019 12:07 PM GMT



திருமலையில் உள்ள மாநில சாலை போக்குவரத்துக் கழகப் பேருந்து டிக்கெட்டுகளில் கிறிஸ்தவ மத பிரச்சார தகவல்கள் அச்சிடப்பட்டுள்ளதை பார்த்து இந்து பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


திருமலையிலிருந்து திருப்பதி செல்ல திருமலையில் ராம்பகிஜா அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. தற்போது வழங்கப்படும் எலக்ட்ரானிக் டிக்கெட்டுகளின் பின்புறம் விளம்பரங்கள் அச்சடிக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில் திருமலையில் வியாழக்கிழமை வழங்கப்பட்ட பேருந்து டிக்கெட்டுகளின் பின்புறம் கிறிஸ்தவ மத பிரச்சாரம் அச்சடிக்கப்பட்டு இருந்தது. அதாவது “ஜெருசலேம் புனித யாத்திரை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


திருமலையில் மாற்று மத பிரச்சாரம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் கிறிஸ்தவ மத சின்னங்களை நேரடியாகவோ மறை முகமாகவோ பயன்படுத்துவது முற்றிலும் தவறு.


இதனால், திருமலை போக்குவரத்துக் கழக பேருந்து டிக்கெட்டுகளில் கிறிஸ்தவ மத பிரச்சாரம் நடைபெறுவதை கண்டு இந்துக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்துக்கள் புனித யாத்திரை குறித்த தகவல்கள் இடம் பெற்றாலும் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் கிறிஸ்தவ மத பிரச்சார விளம்பரங்கள் இருப்பதைக் கண்டு கொதித்துப்போள் உள்ளனர்.


இது குறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள சுனில் தியோத்தார், “திருமலை பேருந்து பணச்சீட்டில், கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலேம் யாத்திரை என்று கிறிஸ்தவ மத பிரச்சாரத்தில் ஆந்திர அரசு ஈடுபட்டுள்ளது. இது தேவையில்லாதது, ஏற்றுக்கொள்ள முடியாதது, மதவெறியை தூண்டுவது. அனைத்துக்கும் மேலாக ஏழுமலையானை அவமதிப்பது” என்று குறிப்பிட்டுள்ளார்.




https://twitter.com/sunil_deodhar/status/1164832681609195521?s=21



ஆந்திராவில் தேர்தல் நேரத்தில் ஜெகன் மோகன் ரெட்டி, தான் மீண்டும் இந்து மதத்திற்கு மதம் மாறிவிட்டதைப்போன்று செய்திகளை பரப்பி அப்பாவி இந்துக்களை நம்ப வைத்தார்.


ஆட்சியை பிடித்ததும் தனது தந்தை முன்னாள் ஆந்திர முதல்வர் ஓய்.எஸ்.ராஜசேகர ரெட்டியைப் போன்றே கிறிஸ்தவ மத வெறியை காட்டி வருகிறார்.


ராஜசேகர ரெட்டி, ஆந்திராவில் கிறிஸ்தவ மத மாற்றத்தை சிவப்பு கம்பளம் விரித்து திறந்து விட்டடார். இதனைத் தொடர்ந்து ஆந்திராவில் இந்துக்களை மதம் மாற்றுவது அதுவரை இல்லாத அளவிற்கு நடந்தது.


மதவெறியின் உச்சக்கட்டமாக, திருப்பதி ஏழுமலையானிடம் தன் வேலையை காட்டினார். அதோடு அதே மலை பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி தன் முடிவை தேடிக்கொண்டார்.


தந்தையை தொடர்ந்து அரசியல் களம் கண்ட ஜெகன் மோகன் ரெட்டி, முதலில் தன் கிறிஸ்தவ மத வெறியை வெளிக்காட்டி வந்தார். அதனால் படு தோல்வியை கண்டார். அதோடு சோனியாவின் கோபத்திற்கு ஆளாகி பல்வேறு வழக்குகளிலும் சிக்கி தவித்தார்.


இந்த நிலையில்தான், கடந்த தேர்தலில் தான், மீண்டும் இந்து மதத்திற்கு மாறிவிட்டது போன்று செய்திகளை வெளியிட்டார். இந்து கோயில்களுக்கு செல்வது போன்ற படங்கள், நெற்றியல் குங்குமம் இட்டதுபோன்ற படங்கள், கையில் சாமி கயிறு கட்டியது போன்ற படங்களை தேர்தல் நேரத்தில் தொடர்ந்து வெளிவருமாறு பார்த்துக்கொண்டார்.


இதன் மூலம் ஆந்திராவில் உள்ள இந்துக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றார். மிகப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தார்.


முதல்வர் நாற்காலியில் அமர்ந்தவுடன், முதல் வேலையாக குடும்பத்துடன், ஜெருசலேம் புனிதப் பயணம் சென்றார். அப்போதுதான் இந்துக்களுக்க உண்மை புரிந்தது. ஜெகன் மோகன் ரெட்டி உண்மையில் இந்துவாக தாய் மதம் திரும்பவில்லை. ஏமாற்றுவதற்காகவே நாடகம் நடத்தியுள்ளார் என்பது புரிந்தது.


இதனைத் தொடர்நது அமெரிக்கா சென்றார். அங்குள்ள ஆந்திர மக்களின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜெகன் மோகன் ரெட்டி, அங்கே குத்து விளக்கு ஏற்றுவது கிறிஸ்தவ மதத்திற்கு எதிரானது என்றுகூறி மறுத்துள்ளார். இதனால் அங்கிருந்த இந்துக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.




https://twitter.com/BJP4Andhra/status/1163827452486881280?s=08



இப்போது திருமலையில் ஏழுமலையானிடம் கைவைக்கும் விதமாக, திருமலை பேருந்தில் பயணச்சீட்டு மூலம் கிறிஸ்தவ மத பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.


இது இந்துக்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது மட்டுமல்ல, ஏழுமலையானையும் சீண்டி உள்ள செயல் என்கிறார்கள் பக்தர்கள்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News