Begin typing your search above and press return to search.
ஊழலுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி புரட்சி நடத்துகிறது !! மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கருத்து!!
ஊழலுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி புரட்சி நடத்துகிறது !! மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கருத்து!!
By : Kathir Webdesk
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டநிலையில், அவருக்கு ஆதரவாக ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், அவர்களுக்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி கூறியதாவது:-
விசாரணை அமைப்புகள், தங்கள் கடமையை செய்கிறார்கள். கோர்ட்டு, தனது கடமையை செய்கிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி எதிர்மறை மனப்பான்மையுடன் செயல்படுகிறது.
ஊழலை புரட்சியாக மாற்றி விட்டது, காங்கிரஸ் கட்சி. ஊழலானது புரட்சியாக மாறியது, இதுவே முதல்முறை.
இதுவரை, ஊழலுக்கு எதிராகவே புரட்சி நடந்து வந்தது. ஆனால், காங்கிரசார் ஊழலுக்கு ஆதரவாக புரட்சி நடத்தி வருகிறார் கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story