Kathir News
Begin typing your search above and press return to search.

ஸ்ரீநகர் சென்றார்கள்; மதிய உணவு உண்டார்கள்; டெல்லி திரும்பினார்கள்! ராகுல்காந்தியின் காஷ்மீர் நாடகம்!!

ஸ்ரீநகர் சென்றார்கள்; மதிய உணவு உண்டார்கள்; டெல்லி திரும்பினார்கள்! ராகுல்காந்தியின் காஷ்மீர் நாடகம்!!

ஸ்ரீநகர் சென்றார்கள்; மதிய உணவு உண்டார்கள்; டெல்லி திரும்பினார்கள்! ராகுல்காந்தியின் காஷ்மீர் நாடகம்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Aug 2019 11:44 AM GMT



நரேந்திர மோடி அரசு, காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை கடந்த 5-ஆம் தேதி அதிரடியாக ரத்து செய்தது. காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு அறிவித்தது.


அங்கு, பள்ளி - கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளன. இதனால் காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது. கட்டுப்பாடுகள் தளர்தப்பட்டு வருகிறது.



https://twitter.com/friendsofrss/status/1164475656844877824


காஷ்மீருக்கு தனி அந்தந்ஸ்த வழங்கும் 370 வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கு உலக நாடுகள் முதல் உள்ளூர் கட்சிகள் வரை அனைவரும் ஆதரித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியின் இந்த துணிச்சலான நடவடிக்கையை ஒவ்வொரு இந்தியனும் பாராட்டி, கொண்டாடி வருகின்றனர்.


ஆனால், பாகிஸ்தான், பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம் பயங்கரவாதிகள், காங்கிரஸ்கிரஸ் கட்சியில் ஒரு பிரிவினர், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.


இதுதொடர்பாக டெல்லியில் தி.மு.க. ஏற்பாடு செய்து இருந்த போராட்டத்தில் 150 பேர் பங்கேற்றனர்.



https://kathirnews.com/2019/08/22/dmk-agitates-in-delhi-in-support-of-pakistan/


இந்த போராட்டத்திற்கு பாகிஸ்தான் ரோடியோ செய்தி வெளியிட்டு மகிழ்ந்தது.


திமுகவின் போராட்டத்தில் கலந்து கொண்டு அசிங்கப்பட்ட தேச துரோகிகள், ராகுல் காந்தி தலைமையில் காஷ்மீர் செல்ல முடிவு செய்தனர்.


காங்கிரசின் முக்கிய தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சரும், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரம், ஐ.என.எக்ஸ் பண மோசடி வழக்கில் தலைமறைவாகி அவரும் அசிங்கப்பட்டு, காங்கிரஸ் கட்சிக்கும் பெரிய தலைகுனிவை ஏற்படுத்தினார். பின்னார் சி.பி.ஐயினால் கைது செய்யப்பட்டு இப்போது சி.பி.ஐ. விசாரணையில் உள்ளார்.


இதனால் ஊழல் காங்கிரஸ் கட்சிக்கு கரி பூசப்பட்டுள்ளது. இதில் இருந்து மீழ்வதற்கு வழி தெரியாமல் தவித்து வருகிறது.


எனவே ப.சிதம்பரம் விவகாரத்தை மறைப்பதற்காக மக்களை திசை திருப்ப வேண்டும் என்று முடிவு செய்தார் ராகுலை.


இந்த நேரத்தில், கம்யூனிஸ்ட் தேச துரோக கும்பல்கள் அவரை அணுகியது. திமுக நடத்திய டெல்லி போராட்டத்தில் ராகுல் கலந்துகொள்ளாவிட்டாலும், அவரது தலைமையில் காஷ்மீர் செல்லுவது என்று முடிவு செய்யப்பட்டது.


இதற்கு சம்மதம் தெரிவித்த ராகுல் காஷ்மீர் செல்லப்போவதாக நேற்று திடீரென அறிவித்தார்.


காங்கிரசின் குலாம் நபி ஆசாத், கம்யூனிஸ்ட் டி.ராஜா, திமுக திருச்சி சிவா, போட்டி ஜனதா தளம் சரத் யாதவ் மற்றும் மனோஜ் ஜா உள்ளிட்ட 12 பேர் அடங்கிய குழு ராகுல் தலைமையில், இன்று (ஆகஸ்ட்-24) காஷ்மீர் செல்ல உள்ளதாக அறிவித்தனர்.


அதன்படி இன்று ராகுல் தலைமையில் சிலர் ஸ்ரீநகர் புறப்பட்டு சென்றனர். அதில் நேற்று அறிவிக்கப்பட்ட 12 பேரும் சென்றார்களா என்ற விவரம் தெரியவில்லை.


ஸ்ரீநகர் சென்ற அவர்களை வெளியே வர காஷ்மீர் நிர்வாகம் அனுமதிக்கவில்லை. காஷ்மீர் மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர் குலைக்கவும், பாகிஸ்தானுக்கு தங்களின் விஸ்வாசத்தை உணர்த்தவும் தேச துரோகிகளின் நாடகத்தை நன்கு தெரிந்திருந்த காஷ்மீர் நிர்வாகம் அவர்களை துரத்தியடித்தது.


இதனால், அவர்கள் விமான நிலையத்தில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு, மீண்டும் விமாத்தில் டெல்லி திரும்பினார்கள்.


இதனால் திமுகவின் டெல்லி போராட்டத்தை போன்றே, ராகுல் காந்தியின் காஷ்மீர் பயணமும், மண்ணை கவ்வியுள்ளது மட்டுமல்லாமல், கேலி கூத்தாக முடிந்தது. அதோடு தேச துரோக கும்பல்களின் நாடகத்தை மக்கள் மீண்டும் ஒருமுறை தெரிந்துகொண்டனர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News