Kathir News
Begin typing your search above and press return to search.

தெலங்கானா கவர்னரானாலும் தமிழகத்தை மறக்க மாட்டேன்! இரு மாநில வளர்ச்சிக்கும் பாடுபடுவேன்!! Dr.தமிழிசை பேச்சு

தெலங்கானா கவர்னரானாலும் தமிழகத்தை மறக்க மாட்டேன்! இரு மாநில வளர்ச்சிக்கும் பாடுபடுவேன்!! Dr.தமிழிசை பேச்சு

தெலங்கானா கவர்னரானாலும் தமிழகத்தை மறக்க மாட்டேன்! இரு மாநில வளர்ச்சிக்கும் பாடுபடுவேன்!! Dr.தமிழிசை பேச்சு

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Sep 2019 11:35 AM GMT


தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் இன்று நியமிக்கப்பட்டார். இதையடுத்து, தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து தமிழிசை சவுந்திரராஜன் மகிழ்ச்சியுடன் விலகியுள்ளார். 2014 - ஆம் ஆண்டு முதல் தமிழிசை, பாஜக தலைவராக செயல்பட்டு வந்தார். அதன் பிறகு மீண்டும் ஒரு முறை பாஜக மேலிடம் அவருக்கான பணி நீட்டிப்பை வழங்கியது. திறம்பட பணியாற்றிய அவருக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.


இதனைத்தொடர்ந்து இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழிசை சவுந்திரராஜன் கூறியதாவது:- என் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு தெலங்கானா ஆளுநர் பொறுப்பை பிரதமர் மோடி அளித்திருக்கிறார். பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் நன்றி .


என் மீது பாசத்தை பொழிந்த தமிழக மக்களுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி. தெலங்கானா வளர்ச்சிக்கு மட்டுமின்றி, தமிழகத்தின் வளர்ச்சிக்கும் பாடுபடுவேன். தெலங்கானாவுக்கு ஆளுநர் ஆனாலும், தமிழகத்திற்கு என்றும் சகோதரி தான். எல்லோரோடும் எளிமையாக பழகும் தன்மையை எந்த உயரத்துக்கு சென்றாலும் விட்டுவிடக்கூடாது என்பதை என் வாழ்நாள் கொள்கையாக வைத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News