Kathir News
Begin typing your search above and press return to search.

“இஸ்ரோ விஞ்ஞானிகள் இலக்கை அடையும் வரை ஓயமாட்டார்கள்” - பிரதமர் நரேந்திர மோடி உறுதி!!

“இஸ்ரோ விஞ்ஞானிகள் இலக்கை அடையும் வரை ஓயமாட்டார்கள்” - பிரதமர் நரேந்திர மோடி உறுதி!!

“இஸ்ரோ விஞ்ஞானிகள் இலக்கை அடையும் வரை ஓயமாட்டார்கள்” - பிரதமர் நரேந்திர மோடி உறுதி!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 Sep 2019 10:54 AM GMT



மும்பை விலே பார்லேவில் “மேக் இன் இந்தியா” திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மெட்ரோ ரயில் பெட்டி இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.


பின்னர், மும்பையில் 42 கிலோமீட்டர் தூரத்துக்கான மேலும் 3 மெட்ரோ வழித் தடங்களுக்கான திட்டப் பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசியபோது பிரதமர் மோடி கூறியதாவது:-





இஸ்ரோ விஞ்ஞானிகளின் தைரியம் மற்றும் மன உறுதியை கண்டு நான் வியந்தேன். கடுமையான சவால்களையும் பொருட்படுத்தாமல் இலக்கை நோக்கி எவ்வாறு முன்னேறுவது என்பதை நான் அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.


இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு நிலாவை அடையும். இந்தியாவின் கனவை நனவாக்கும். நிலவை அடைய வேண்டும் என்ற இலக்கை நாம் நிர்ணயித்து விட்டோம். இஸ்ரோவில் உள்ள விஞ்ஞானிகள் தங்கள் இலக்கை அடையும் வரை ஓயமாட்டார்கள்.





இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News