Kathir News
Begin typing your search above and press return to search.

இவ்வளவு இழிவாக பேச முடியுமா.? இந்து மத நம்பிக்கையின் அடி மடியில் கை வைத்த தி.மு.க - உச்ச கட்ட வன்மத்தை கக்கிய ராசா : திடுக்கிட வைக்கும் வீடியோ!

இவ்வளவு இழிவாக பேச முடியுமா.? இந்து மத நம்பிக்கையின் அடி மடியில் கை வைத்த தி.மு.க - உச்ச கட்ட வன்மத்தை கக்கிய ராசா : திடுக்கிட வைக்கும் வீடியோ!

இவ்வளவு இழிவாக பேச முடியுமா.? இந்து மத நம்பிக்கையின் அடி மடியில் கை வைத்த தி.மு.க - உச்ச கட்ட வன்மத்தை கக்கிய  ராசா :  திடுக்கிட வைக்கும் வீடியோ!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 Sep 2019 2:31 PM GMT


இவ்வளவு காலம் பகுத்தறிவு என்ற பெயரில் இந்து மதத்தை மட்டுமே குறி வைத்து தாக்கி வந்த திமுகவும், அதனை சார்ந்த திராவிட இயக்கங்களும் அடுத்து தமிழ் மொழி மீது தங்கள் வன்மத்தை பாய்ச்சியுள்ளன. அவர்கள் செய்து வரும் செய்து வரும் போலி திராவிட அரசியல் அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டப்பட்டு வருவதால், சங்க தமிழ் இலக்கியங்களை இழிவு படுத்தி மக்கள் மனதில் நஞ்சை விதைக்கும் திட்டத்தை கையிலெடுத்திருக்கின்றனர். அதற்கு சான்றாக சமீபத்தில் திமுக எம்.பி ராசா பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.


பேராசிரியர் மு.பி.பாலசுப்ரமணியன் எழுதிய ‘திராவிட இயக்கம் வளர்த்த தமிழ்’ என்கிற நூல் வெளியிட்டு விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தி.மு.க பொருளாளர் துரைமுருகன், தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா எம்.பி., உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆ.ராசா, சங்கத் தமிழ் இலக்கியம் மாசுபட்ட இலக்கியமாகத்தான் காட்சியளித்துக் கொண்டு இருந்தது. மதமும், சாதியும் நஞ்சாகக் கலந்துகொண்டு இருந்தது. அதைத் தூய்மைப் படுத்தத்தான் திராவிட இயக்கம் உருவானது. சமயம் சார்ந்த மொழியை சமத்துவ மொழியாகக் கொண்டு வந்தது திராவிட இயக்கம் தான்.” எனக் குறிப்பிட்டார்.


ஏற்கனவே இந்து மதத்தை மட்டுமே குறி வைத்து பகுத்தறிவு பேசியும், மற்ற மதங்களில் என்ன நடந்தாலும் வாய் மூடி மவுனியாக இருந்து வரும் திமுக. சங்க இலக்கியங்களை வசைபாடி பேசியதோடு சைவ மற்றும் வைணவ இலக்கியங்கள் குறித்து கொச்சைபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்திருக்கிறார். முதலில் மக்கள் சமய நம்பிக்கையை உடைக்க வேண்டும், அதற்கு பிறகு மொழியில் உள்ள சமய பற்றை சிதைக்க வேண்டும், பிறகு தங்கள் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதில் திமுக தெளிவாக முன்னேறி வருகிறது. இதனை அறியாமல் இன்னும் ஒரு சில கூட்டம் திராவிட சித்தாந்தங்களை கையில் தூக்கிகொண்டு திமுக பின்னால் செல்வது பரிதாபத்துக்குறிய நிலையாகும்.




https://twitter.com/MODIfiedTamilan/status/1171412661889728512

Next Story
கதிர் தொகுப்பு
Trending News