கிருஷ்ண பகவானை அவமதித்த கி.வீரமணி மீது 6 பிரிவுகளில் வழக்கு! பகவான் ஆட்டம் ஆரம்பம்!!
கிருஷ்ண பகவானை அவமதித்த கி.வீரமணி மீது 6 பிரிவுகளில் வழக்கு! பகவான் ஆட்டம் ஆரம்பம்!!
By : Kathir Webdesk
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியும்,அவரது எடுபிடிகளும் தொடர்ந்து இந்து கடவுள்களையும், இந்து மத நம்பிக்கைகளையும் அவமதித்து வந்துள்ளனர். இருந்தாலும் பல்வேறு காரணங்களால் இதுவரை இந்த கும்பல் தப்பித்து வந்துள்ளது. இப்போது கிருஷ்ண பகவான் தனது ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார்.
கடந்த மே மாதம் சென்னை பெரியார் திடலில் நடந்த ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கி.வீரமணி, கடவுள் ‘கிருஷ்ணர்’ பற்றி அவதூறாக பேசினார்.
அவர் பேசிய வீடியோ காட்சியை பார்த்த நெல்லை தச்சநல்லூரை சேர்ந்த ஸ்ரீஸ்ரீ ராதா தாமோதர் ஆலய நிர்வாகி சீத்தாபதி தாஸ் என்பவர், கி.வீரமணி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெல்லை 4-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் புகார் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, திராவிட கழக தலைவர் கி.வீரமணி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு, நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் போலீசுக்கு உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, கி.வீரமணி மீது வழக்கு பதிவு செய்தனர். அவர் மீது பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் பேசியது, மத நம்பிக்கைகளை இழிவு படுத்தி அவதூறாக பேசியது தொடர்பாக 153, 153 (ஏ), 295 (3), 293, ஐ.பி.சி. 505 (1), தகவல் தொழில்நுட்பம் 66 (ஏ) ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக நெல்லை போலீசார், விரைவில் சென்னை வந்து கி.வீரமணியிடம் விசாரணை நடத்த உள்ளனர். போலீஸ் விசாரணைக்குப் பிறகு அவர் மீது எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது தெரிய வரும்.
இந்து மத நம்பிக்கைகளை இழித்தும், பழித்தும் பேசிவரும் மு.க.ஸ்டாலின், திருமாவளவன் போன்றவர்களுக்கு இனி சிக்கல்தான் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.