பாகிஸ்தான் துண்டு துண்டாக சிதறும்! அதை யாராலும் தடுக்க முடியாது-ராஜ்நாத் சிங்
பாகிஸ்தான் துண்டு துண்டாக சிதறும்! அதை யாராலும் தடுக்க முடியாது-ராஜ்நாத் சிங்
By : Kathir Webdesk
குஜராத் மாநிலத்தில் உள்ள , சூரத் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பங்கேற்று வீரமரணம் அடைந்த இராணுவ வீரர்களின் குடும்பத்தை கவுரிவித்தார் மத்திய பாதுகாப்பு துறை ராஜ்நாத் சிங் அந்த நிகழ்ச்சியில் ராஜ் நாத் சிங் பேசியதாவது :
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது நாட்டினருக்கு சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை மீற கூடத்து என உத்தரவிட்டிருப்பது நல்லது என கூறினார். ஏனென்றால், இந்திய எல்லைக்குள் வந்தால் பாகிஸ்தானியர் வந்தால் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து, அவர்களை திரும்பிச் செல்லவிடமாட்டார்கள்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த 370 பிரிவை இந்தியா நீக்கியதை பாகிஸ்தானால் சகித்து கொள்ள முடியவில்லை. அதனால்தான் ஐ.நாவிடம் தவறான பிரச்சாரத்தை கூறி புலம்பி வருகிறது. ஆனால், உலக நாடுகள் ம் பாகிஸ்தானின் நாடகத்தை நம்பவில்லை.
சுதந்திரத்துக்குப்பின் இந்தியாவில் சிறுபான்மையினர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், பாகிஸ்தானில் சீக்கியர்கள், பவுத்தர்கள், இந்துக்களுக்கு உள்ளிட்ட சிறுபான்மையினாரை மதம் மாற்றுவது மிரட்டி வருகிறது.
இந்தியாவிலோ சிறுபான்மையினர் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்கள், இனிமேலும் தொடர்ந்து பாதுகாப்பாக இருப்பார்கள். மக்களை சாதிரீதியாகவும், மதரீதியாகவும் மக்களை இந்தியா ஒருபோதும் பிரித்து பார்க்காது.
மதத்தின் அடிப்படையில் உருவாகிய பாகிஸ்தான் நாடு 1971-ஆம் ஆண்டு இரு பிரிவுகளாகப் பிரிந்தது. அரசியலோடு மதம் கலந்து பாகிஸ்தான் இருப்பதால், பாகிஸ்தான் பல துண்டுகளாக சிதறுவதை தடுக்க முடியாது. அதிலும் தீவிரவாதத்தை நிறுத்தாவிட்டால், பாகிஸ்தான் எதிர்காலத்தில் துண்டு துண்டுகளாகச் சிதறுவதை யாராலும் தடுக்க முடியாது
இனிமேல், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் பேச்சுவார்த்தை என்றால், அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைப் பற்றி மட்டும்தான்.
இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்