அடுத்து அடிதடி அரசியலில் இறங்கிய தி.மு.க - முன்னாள் கவுன்சிலரிடமிருந்து காப்பாற்ற கோரி பாதுகாப்பு கேட்கும் தனியார் கம்பெனி.!
அடுத்து அடிதடி அரசியலில் இறங்கிய தி.மு.க - முன்னாள் கவுன்சிலரிடமிருந்து காப்பாற்ற கோரி பாதுகாப்பு கேட்கும் தனியார் கம்பெனி.!
By : Kathir Webdesk
நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களை பணம் கேட்டு தொடர்ச்சியாக அச்சுறுத்தி மிரட்டல் விடுக்கும் திமுக முன்னாள் கவுன்சிலர் தி.முத்துச் செல்வத்திடம் இருந்து பாதுகாப்பு வேண்டி மாவட்ட ஆட்சியருக்கு தனியார் கம்பெனி எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது.
அதில், எங்கள் ஆயில் மில் தொடர்பாக நேர்மையான முறையில் எண்ணெய் மாதிரி எடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மூலம் ஆய்வுக்கு அனுப்ப உத்தரவிட்டு இருந்தீர்கள். அதை நாங்களும் பணிவுடன் ஏற்றுக் கொண்டோம். உங்களின் நேர்மையான கட்டளைப்படி உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் நேர்மையான முறையில் செயல்பட்டு எண்ணெய் மாதிரியை ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளனர்.
அது தொடர்பான ஆய்வு பரிசோதனை நிலுவையில் உள்ள நிலையில் இவை அனைத்தையும் நன்கு அறிந்து திமுக கவுன்சிலர் தி.முத்துச் செல்வம் அவர்கள் உங்களின் நேர்மையான செயல்பாடுகளையும் மதிக்காமல் மீண்டும் ஒரு போராட்டத்தை 18.09.2019 அன்று சட்டத்திற்கு புறம்பாக நடத்துவேன் என்று தொழிலாளர்களையும், நிர்வாகத்தையும் மிரட்டுவது மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.
மேலும் எங்களிடம் பணம் கேட்டு மிரட்டி அவர் கேட்டத் தொகையை எங்களால் கண்டிப்பாக கொடுக்கவும் முடியாத சூழ்நிலையில் ஆயில் மில் வங்கி கடனில் தவிக்கிறது. ஆகவே மதிப்பிற்குரிய ஐயா அவர்கள் காக்கும் கடவுளாக இருந்து எங்களின் 60 குடும்பங்களின் வாழ்வதாரத்தை காத்து அருள் புரிய வேண்டும் என்று மன்றாடி கேட்டுக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளனர். ஏற்கனவே ஓசி பிரியாணி, ஓசி பஜ்ஜி என்று வைரலான திமுக, இந்த சம்பவத்தின் மூலம் கட்டப்பஞ்சாயத்தை கையில் எடுத்துள்ளது.