Kathir News
Begin typing your search above and press return to search.

மோடி அரசின் ஆதரவால் சுணக்கத்தை எதிர் கொண்டு எழுச்சி நடைபோடும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் !! முதலீடுகள் ஈர்ப்பில் ஒரே ஆண்டில் 43 சதவீத வளர்ச்சி!!

மோடி அரசின் ஆதரவால் சுணக்கத்தை எதிர் கொண்டு எழுச்சி நடைபோடும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் !! முதலீடுகள் ஈர்ப்பில் ஒரே ஆண்டில் 43 சதவீத வளர்ச்சி!!

மோடி அரசின் ஆதரவால் சுணக்கத்தை எதிர் கொண்டு எழுச்சி நடைபோடும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் !! முதலீடுகள் ஈர்ப்பில் ஒரே ஆண்டில் 43 சதவீத வளர்ச்சி!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Sep 2019 10:21 AM GMT



இந்தியா உட்பட உலகம் முழுவதும் அத்தியாவசியமற்ற மற்றும் ஆடம்பர உயர் விலை பண்டங்களின் மீதான நுகர்வோர் தேவை குறைந்ததை அடுத்து அதன் தாக்கம் இந்தியப் பொருளாதாரத்திலும் தற்காலிகமாக சிறிதளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் பல பொருள்களுக்கான தேவை குறைந்துள்ளதால் குறுகிய கால அளவிலான ‘சுழற்சி’ மந்தநிலையை சந்தித்து வருகிறது.


வருடாந்த மொத்த தேசிய உற்பத்தியில் தனி நபர் நுகர்வு 55-60 சதவிகிதமாகும். இது நடப்பு நிதியாண்டில் 3.1 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது. நிலை மூலதன மொத்த உருவாக்கம் (ஜி.எஃப்.சி.எஃப்), 2011 ஆம் ஆண்டில் 34.3 சதவீதத்திலிருந்து 2018 இல் 28.8 சதவீதமாகக் குறைந்தது. இருப்பினும், முதலீட்டாளர்கள் இந்திய பொருளாதாரத்தின் நீண்டகால எதிர்காலம் குறித்து நேர்மறையான எண்ணத்தில் உள்ளனர், ஏனெனில் இந்த பத்தாண்டின் தொடக்க காலத்தில் அதாவது 2011 ஆம் ஆண்டுடன் தற்காலத்தை ஒப்பிடும்போது தற்போது புதிதாக தொழில் தொடங்குபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது . தொழில்களில் முதலீடும் முன்பை விட அதிகமாக உள்ளது.


தொழில் முன்னேற்றம் குறித்த ஆலோசனை நிறுவனமான EY இன் ஆய்வுத் தகவல் படி, நடப்பு 2019 முதல் அரை ஆண்டில் மட்டும் 536 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் புதிய முதலீட்டு ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளன. இது கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 43 சதவீதம் அதிகம் ஆகும். இந்த 536 ஒப்பந்தங்கள் மூலம் மொத்த முதலீட்டுத்தொகை 23.4 பில்லியன் டாலர்களைக் கொண்டுள்ளது, இது கடந்த ஆண்டில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பெற்ற முதலீட்டை விட 27 சதவீதம் அதிகம் ஆகும் .


EY இன் ஆய்வுத்தகவல் படி "2019 ஆம் ஆண்டின் உலகளாவிய முதலீட்டாளர்களிடமிருந்து தனியார் ஈக்விட்டி முதலீடுகளை ஈர்ப்பதில் இந்திய உள்கட்டமைப்பு தொழில்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகள் முன்னிலை வகித்துள்ளன" என்று EY இன் பங்குதாரரும் தேசிய தலைவருமான விவேக் சோனி கூறினார்.


மிக அதிக அளவிலான இந்த முதலீட்டின் எழுச்சிக்குக் காரணம் இந்திய பொருளாதாரத்தின் மீது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வைத்துள்ள மிகப் பெரிய நம்பிக்கையை காட்டுகிறது. அவர்கள் தற்காலிக சுணக்கத்தை பொருள்படுத்தாமல் நீண்டகால அளவில் இந்திய தொழில் துறைகளில் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பதை இது காட்டுகிறது.


பைக் வாடகை தொழிலில் இந்தியாவில் புதிதாக களம் இறங்கியுள்ள வோகோ நிறுவனம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளது, ஏனெனில் இது 5-10 ஆண்டுகள் திட்டத்தை தங்கள் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது.


இது குறித்து அந்த நிறுவனம் கூறுகையில் நாங்கள் அடுத்த 5-10 ஆண்டுகளுக்கு தொழிலை முன்னெடுத்து செல்லும் திட்டத்தை உரிய திட்டங்களுடன் வைத்துள்ளோம். இந்தியாவில் நிலவும் ஒரு தற்காலிக மந்தநிலை தங்களை பாதிக்காது என வோகோவின் தலைமை நிர்வாகி ஆனந்த் அய்யதுரை கூறினார்.


தொழில் துறை கொள்கை மற்றும் ஊக்குவிப்புத் துறையின் (டிபிஐஐடி) சமீபத்திய புள்ளி விபர தகவல்களின்படி, ஸ்டார்ட்அப் இந்தியா திட்டம் இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைகளை உருவாக்கியுள்ளது. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாக்கிய நேர்முக மற்றும் மறைமுக மொத்த வேலைவாய்ப்புகள் 560,000 க்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக டிபிஐஐடி செயலாளர் ரமேஷ் அபிஷேக் கூறினார்.


நாட்டில் இளைஞர்களை தொழில் தொடங்க ஊக்குவிப்பதற்காக ஊக்குவிப்பதற்காக மோடி அரசு ஸ்டார்ட்அப் இந்தியா (ஆகஸ்ட் 2015) மற்றும் ஸ்டாண்டப் இந்தியா (ஏப்ரல் 2016) என்ற இரண்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியது. தொழில் தொடங்குவதை எளிமைப்படுத்தல், நிதி உதவி மற்றும் ஊக்கத்தொகை, தொழில்-கல்வி கூட்டாண்மை மற்றும் ஆரம்ப கால பாதுகாப்பு ஆகிய மூன்று தூண்களை மோடி அரசு உருவாக்கிய ஸ்டார்ட்அப் இந்தியா திட்டம் கொள்கையாக கொண்டுள்ளது.


இந்த நிறுவனங்கள் மோடி அரசாங்கம் செய்துள்ள பல்வேறு உதவிகளால் நன்கு வளர்ந்துள்ளன. குறிப்பாக பிரதமரின் முத்ரா கடன் திட்டம் குறைந்த வட்டி கடன்களை அளித்துள்ளன. இந்த திட்டம் புதுமையையும், உற்பத்தி திறனையும் அதிக அளவில் வளர்த்துள்ளதால் ஏராளமான வேலை வாய்ப்புகளை மேலும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதாரத்தில் சிறிய சுணக்கம் இருந்தாலும் இந்த நிறுவனங்கள் தங்கள் இலக்கை குறைத்துக் கொள்ளவில்லை. இதனால் உற்பத்தி விழ வாய்ப்பில்லை. ஸ்டார்ட் அப்புகளுக்கான மோடி அரசின் சாதகமான ஆதரவால் வெளி நாட்டு முதலீட்டாளர்களின் ஆதரவு கணிசமான அளவில் கிடைத்து வருகின்றன. இதனால் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நன்கு வளர்ந்து வருகின்றன. சென்ற 2018 ஆம் ஆண்டில் ஸ்டார்ட்அப்களுக்கான இரண்டாவது பெரிய மையமாக இந்தியா மாறிவிட்டது. இது ஒரு நல்ல அறிகுறியாகும் ”என்று புதிய ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி க்ஷிதிஜ் ஷா கூறினார்.


தொடக்க மதிப்பீடு கடந்த சில ஆண்டுகளில் அதிவேகமாக உயர்ந்துள்ளது, மேலும் அவை பில்லியன் பிளஸ் மதிப்பீட்டை அடைய குறைந்தபட்ச நேரத்தை எடுத்துள்ளன. உதான், பி 2 பி இயங்குதளம் வெறும் 24 மாதங்களில் 1 பில்லியன் டாலர் அளவுக்கு மதிப்பீட்டை அடைந்துள்ளது. ஓலா எலக்ட்ரிக் ஏழு மாதங்களில் 1 பில்லியன் டாலர்களை அடைந்தது, பைஜூ நிறுவனத்தின் மதிப்பீடு நான்கு மாதங்களில் 1 பில்லியன் டாலரிலிருந்து 5 பில்லியன் டாலராக உயர்ந்தது.


ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடக்கத்தில் சிறிதளவு நஷ்டத்தை சந்தித்தாலும் நீண்ட கால எதிர்காலம் குறித்து உறுதியாக இருப்பதால் குறுகிய காலத்தில் ஏற்படும் இழப்பு அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. முதலீட்டாளர்கள் மோடி அரசாங்கத்தின் சாதகமான கொள்கையால் உற்சாகமாக இருப்பதாலும், முதலீட்டாளர்கள் அவர்கள் மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளதாலும் பொருளாதார மந்தத்தை அவர்கள் ஏற்பதில்லை.


சென்ற 2019 நாடாளுமன்ற பொது தேர்தலின்போது பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தது. இந்த நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக, தொழில் முனைவோருக்கு 50 லட்சம் ரூபாய் வரை பிணை அற்ற கடன் வழங்குவதாக பாஜக உறுதியளித்தது. "தொழில்முனைவோருக்கு 50 லட்சம் வரை பிணை இல்லாத கடன் வழங்க புதிய திட்டத்தை நாங்கள் தொடங்குவோம். பெண் தொழில் முனைவோருக்கான கடன் தொகையில் 50% மற்றும் ஆண் தொழில் முனைவோருக்கு 25% கடன் தொகையை நாங்கள் உத்தரவாதம் செய்வோம் ”என்று அறிக்கை அளித்தது.


மேலும் 20,000 கோடி ரூபாய் தொகையுடன் இந்த திட்டத்துக்கான தொடக்க நிதியை அளிப்பதாகவும் கட்சி உறுதியளித்தது. “20,000 கோடி‘ ரூபாய்க்கான ஃபண்ட் ’உருவாக்குவதன் மூலம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை நாங்கள் தொடர்ந்து ஊக்குவிப்போம், ஊக்குவிப்போம்” என்று அந்த அறிக்கையில் உறுதி கூறியுள்ளது. மோடி அரசாங்கத்தின் அடுத்த ஐந்து ஆண்டுகள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பொற்காலமாக இருக்கும் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்.


http://fipost.com/2019/09/amid-economic-slowdown-startups-receive-huge-investment-and-are-on-a-hiring-spree/



Next Story
கதிர் தொகுப்பு
Trending News