தி.மு.க காங்கிரஸ் இம்ரான்கானிடம் இந்தியாவை விற்றுவிடுவார்கள் - CTR நிர்மல் குமார்!!
தி.மு.க காங்கிரஸ் இம்ரான்கானிடம் இந்தியாவை விற்றுவிடுவார்கள் - CTR நிர்மல் குமார்!!
By : Kathir Webdesk
பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் ஐக்கிய நாடுகள் சபையில் பேசியது இந்தியர்கள் மத்தியில் கோபத்தையும் உலக நாடுகள் மத்தியில் கவலையையும் அடைய செய்துள்ளது.
அவர் தனது உரையில் காங்கிரஸ் மற்றும் திமுக தங்களது ஓட்டு அரசியலுக்காக காஷ்மீர் விஷயத்தில் என்ன பேசினார்களோ அதையே தனக்கு சாதகமாக, தனது தனது தரப்பு சாட்சியாக சேர்த்துள்ளார் முன்னாள் உள்துறை அமைச்சர் சிதம்பரம் உள்பட.
ஐக்கிய நாட்டு சபையில் தனது கோபத்தின் உச்சமாக விரைவில் காஷ்மீரில் ரத்த ஆறு ஓடும் என்று மிரட்டியுள்ளார் இம்ரான்கான் இந்த பேச்சு உலக தலைவர்களை அதிர வைத்துள்ளது. ஒரு நாட்டின் அதிபர் தீவிரவாதியை போல் பேசியுள்ளார் என்று உலக நாடுகள் இம்ரான்கான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்திய மக்களை இம்ரான் கானின் இந்த பேச்சு கொதிப்படைய செய்துள்ளது.
தீவிரவாதியை போல் பேசியுள்ள இம்ரான்கானை கண்டிக்காத ஒரே கூட்டம் காங்கிரஸ் திமுக மட்டும்தான்.
மக்கள் அனைவரும் பிரதமர் மோடி பின்னால் ஓரணியில் நிற்கின்றனர்.
அன்று ராஜபஷேவிடம் கூலி வாங்கிக்கொண்டு ஈழத்தமிழர்களை படுகொலை செய்ய உதவினர். இன்று என்ன பலன் எதிர்பார்த்து நமது நாட்டை மிரட்டும் பாகிஸ்தான் அதிபருக்கு சாதகமாக நடந்து கொள்கிறார்களோ என்று தெரியவில்லை.
இது போன்ற கட்சிகளை மக்கள் என்றும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் இவர்கள் அரசியலுக்காக நாட்டையே விற்றாலும் ஆச்சரியம் இல்லை.
தமிழக பா.ஜ.க சமூக ஊடக பிரிவு அமைப்பாளர் CTR.நிர்மல் குமார் .